tamilni 154 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

Share

இலங்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

இலங்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து கடனைப் பெற முடியாத வகையில் கடன் தகவல் பணியகத்தில் (Crib) பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடன் தகவல் பணியகத்தின் பொது முகாமையாளர் புஷ்பிகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையர்களின் கடன் முகாமைத்துவ அறிவு மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதே இதற்குக் காரணம் என ஜெயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

பலர் தங்களது கடன் மற்றும் குத்தகைத் தவணைகளை முறையாகச் செலுத்திய போதிலும், சில நிதி நிறுவனங்கள் உரிய தகவல்களைப் புதுப்பிக்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிலைமையை சரிசெய்வதற்காக, இலங்கை கடன் தகவல் பணியகம், கடன் முகாமைத்துவம் தொடர்பில் இலங்கை மக்களுக்கு தெளிவுபடுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

எந்தவொரு நபரும் நிதி நிறுவனம் ஒன்றிற்கு செல்லாமல் இலங்கை கடன் தகவல் பணியகத்தின் http://www.crib.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தனது கடன் தகவல் அறிக்கையை பெற்றுக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...