tamilni 144 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மனித கடத்தல் முகவர்களை நியமித்த நபர் கைது

Share

இலங்கையில் மனித கடத்தல் முகவர்களை நியமித்த நபர் கைது

நேபாள மனித கடத்தல்காரர் ஒருவர், இலங்கைக்கு முகவர்களை அனுப்பியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேபாள மக்களை பல்வேறு வெளிநாடுகளுக்கு கடத்திய குற்றச்சாட்டின் பேரில் தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் நேபாள பிரஜை ஒருவரை நேபாள பொலிஸாரினால் கைது செய்துள்ளதாக மை ரிபப்ளிகா செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது டெக்சாஸில் வசிக்கும் 52 வயதான ஹஸ்தா கௌதம், தனது வாடிக்கையாளர்களை பல்வேறு நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி 20 மில்லியன் ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக நேபாள பொலிஸ் மனித கடத்தல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கௌதம் கடத்தல் நடவடிக்கையின் மூளையாக இருந்து இதுவரை சுமார் 200 நேபாள பிரஜைகளை அமெரிக்காவிற்கு கடத்தியுள்ளார்.

இதற்காக அவர், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இலங்கை, கொலம்பியா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் 5 முகவர்களை நியமித்துள்ளமை விசாரணையில் தெரியவந்தது. இதேவேளை கவுதமால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...