rtjy 116 scaled
இலங்கைசெய்திகள்

சனல் 4 : சுரேஷ் சலேவின் முறைப்பாட்டையடுத்து விசாரணை

Share

சனல் 4 : சுரேஷ் சலேவின் முறைப்பாட்டையடுத்து விசாரணை

சனல் 4 காணொளி தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அண்மையில் சனல் 4 ஊடகம் வெளியிட்டிருந்த ஆவணப்படம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் குறித்த படத்தொகுப்பில் அரச புலனாய்வுத் துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தன்னை சங்கடப்படுத்தும் வகையில் சனல் 4 இந்த காணொளியை ஒளிபரப்பியுள்ளதாக பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகத்தில் சுரேஷ் சலே முறைப்பாடு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான சூழலில் குறித்த காணொளி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் தெரிவித்துள்ளது என சுரேஷ் சலேயின் சட்டத்தரணி பசன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த காணொளியை வெளியிடுவதற்கு முன், ஆகஸ்ட் 7ஆம் திகதி சுரேஷ் சலேயிடம் சனல் 4 ஊடகவியலாளர்கள் ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக வினவியதாகவும் சட்டத்தரணி பசன் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுப்பதாகவும், அந்த காலப்பகுதியில் தான் இலங்கையில் தங்கியிருக்கவில்லை என்றும் சுரேஷ் சலே சனல் 4 இற்கு அடுத்த நாளே எழுத்துமூலம் அறிவித்துள்ளதாகவும் சட்டத்தரணி பசன் வீரசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
432e7679 1282 465e 9bbd 9fff0c004877
இலங்கைசெய்திகள்

மாலைத்தீவில் 355 கிலோ போதைப்பொருளுடன் கைதான 5 இலங்கையர்கள் 30 நாட்கள் தடுப்புக் காவலில்: நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்!

355 கிலோகிராம் ஐஸ் (Ice) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட...

th
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாகப் படகில் இந்தியா சென்ற இலங்கையர் கைது: மன்னார் குடும்பஸ்தர் தனுஷ்கோடியில் பிடிபட்டார்!

சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியைச் சென்றடைந்த குடும்பஸ்தர்...

9867DD57 36F5 4D0B B0C9 6373354B6CAA
செய்திகள்அரசியல்இலங்கை

பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்வது குறித்து ஆராயும் குழு: பரிந்துரை அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிப்பு!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (Prevention of Terrorism Act – PTA) இரத்து செய்வது தொடர்பான பரிந்துரைகள்...

Untitled design 2
செய்திகள்அரசியல்இலங்கை

பொய்க் குற்றச்சாட்டு வழக்கு: தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவைக் கைது செய்யப் பிடியாணை உத்தரவு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை (Thusitha Halloluwa) கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு...