tamilni 123 scaled
இலங்கைசெய்திகள்

சுவீடனில் படிப்பதற்காக காத்திருக்கும் இலங்கை மாணவர்களின் நிலை

Share

சுவீடனில் படிப்பதற்காக காத்திருக்கும் இலங்கை மாணவர்களின் நிலை

சுவீடனில் உயர்கல்வி படிப்பதற்காக சுமார் 510 இலங்கை மாணவர்கள் அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருந்தாலும், நாட்டிற்குள் நுழைவதற்கு இன்னும் ஒப்புதல் பெற முடியாமல் போயுள்ளது.

இதனால் மாணவர்கள் மனவிரக்தியடைந்து நம்பிக்கையற்றவர்களாகவும் மாறியுள்ளனர் என சுவீடன் உயர்கல்வி மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த மாணவர்களில் 30 முதல் 75 இலட்சம் வரை பணம் செலுத்தியவர்கள் உள்ளதாக நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் அரவிந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

சுவீடன் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெறுவதற்கு சுமார் 980 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 407 பேர் வீசா பெற்றுள்ளனர். ஆனால் எஞ்சியவர்களுக்கு வீசா வழங்கப்படுமா என்பதை அந்த நாடு அறிவிக்கவில்லை.

நாட்டில் சுவீடன் தூதரகம் இல்லாததால், இந்தியாவில் உள்ள டெல்லி தூதரகத்தில் இருந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், பல மாணவர்கள் டெல்லி தூதரகத்திற்குச் சென்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை நல்ல பதில் கிடைக்கவில்லை.

சுவீடன் பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பித்த பல பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையை நிறுத்திவிட்டனர்.

சில பல்கலைக்கழகங்கள் அவர்களின் கோரிக்கைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு காலத்தை நீட்டித்தது. ஆனால் சுவீடனில் குடியேற்ற நிறுவனம் ஒப்புதல் அளிக்காததால் உயர்கல்வி அனுமதிகளை இழந்துவிட்டனர்.

அத்துடன் சில மாணவர்கள் செலுத்திய பணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
875262697 1
இலங்கை

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள் மூலம் பணம் பறித்த கும்பல் கைது!

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டு, பணம் பறித்து வந்த கும்பலைச் சேர்ந்த மூவரை...

image 1000x630 13
இலங்கை

குற்றவாளிகளைப் பிடிக்க இன்டர்போல் உதவி: குற்றவாளிகளை நாடு கடத்த நடவடிக்கை

குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நேர்மறையான நடவடிக்கைகளை இன்டர்போல்  பாராட்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக,...

image 1000x630 12
செய்திகள்Featuredஇலங்கை

செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது

இஷாரா செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டு: பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின்...

Gold Rush Returns The Soaring Price of Sovereigns and the Stories from Sea Street
செய்திகள்இலங்கை

அதிரடி விலை உயர்வு: இலங்கையில் ஒரு பவுன் தங்கம் ரூ.4 இலட்சத்தைக் கடந்தது!

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 24 கரட் ஒரு பவுன்...