இலங்கைசெய்திகள்

கொழும்பின் புறநகரில் கொள்ளையடிக்க சென்றவருக்கு அதிர்ச்சி

Share
tamilni 85 scaled
Share

கொழும்பின் புறநகரில் கொள்ளையடிக்க சென்றவருக்கு அதிர்ச்சி

ஹோமாகம, பிட்டிபன பிரதேசத்தில் கத்தியுடன் வீடொன்றில் கொள்ளையடிக்க சென்ற கொள்ளையர் கணவன் மனைவியினால் தாக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

விடியற்காலையில் நிஞ்ஜா வேடமிட்டு வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையனை வீட்டின் உரிமையாளர் அவதானித்துள்ளார்.

அங்கு, கொள்ளையன் அங்கிருந்தவர்களை கத்தியால் தாக்கிவிட்டு ஓட முயன்றுள்ளார். அப்போது, ​​வீட்டின் உரிமையாளரும், அவரது மனைவியும் கொள்ளையனுடன் சண்டையிட்டு, மடக்கிப் பிடித்தனர்.

போராட்டத்தின் போது கொள்ளைக்காரரின் கையிலிருந்த மன்னா கத்தியை வீட்டின் உரிமையாளர் பிடுங்கி அதன் மூலம் கொள்ளையனை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த கொள்ளையன் தற்போது ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே கொள்ளையடிக்க வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...