rtjy 61 scaled
இலங்கைசெய்திகள்

பிள்ளையானுக்கு உதவிய சிறையதிகாரி .. சனல் 4இல் வெளியான ஆதாரம்

Share

பிள்ளையானுக்கு உதவிய சிறையதிகாரி .. சனல் 4இல் வெளியான ஆதாரம்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு சிறைச்சாலை அதிகாரிகள் உதவியதாக அவரது முன்னாள் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையானுக்கு விசேட பிரபுக்களுக்கான சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சனல் 4 ஊடகத்திற்கு வழங்கிய தகவல்களில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சிறைச்சாலையில் தம்மை சந்திக்குமாறு பிள்ளையான் தொலைபேசியில் அறிவித்தார். பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் நான் சில கடும்போக்குவாதிகளை சந்தித்தேன்.

இவர்களுக்கு உலகத்தில் நாட்டம் கிடையாது மரணத்தை தழுவ தயங்காதவர்கள் எனவும் பிள்ளையான் அவர்களை அடையாளப்படுத்தினார்.

அங்கு கடமையில் இருந்த சிறைச்சாலை உத்தியோகத்தர், கருத்த உருவத்தைக் கொண்ட தாடியுடனான நபரை அழைத்து வந்தார். அவரே சைனி மௌவியாவார். உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுடன் இந்த நபர்களே தொடர்புபட்டிருந்தனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலைத் தாக்குதலின் பின்னர் வெளியான தகவல்களின் அடிப்படையில் இதனை மேற்கொண்டவர்கள் தாம் சிறையில் சந்தித்தவர்கள் என்பது தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதன் போது பிள்ளையானை தொடர்பு கொண்ட போது “வாயை மூடிக்கொண்டு பேசாமல் இரு” என பிள்ளையான் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...