tamilni 69 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையர்களுக்கு வீசா வழங்கும் பிரபல ஐரோப்பிய நாடு

Share

இலங்கையர்களுக்கு வீசா வழங்கும் பிரபல ஐரோப்பிய நாடு

பின்லாந்தில் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிகளவிலான குடியுரிமை கோரிய விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் வெளிநாட்டு மாணவர்களின் விசா விண்ணப்ப கோரிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பின்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் இறுதிக்குள், மொத்தம் 8,762 ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத மாணவர்கள் விசாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக, பின்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அதே காலகட்டத்தில், பின்லாந்து மொத்தம் 7,039 பேருக்கு குடியிருப்பு அனுமதிகளை வழங்கியுள்ளது.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், படிப்பு நோக்கங்களுக்காக 5,911 குடியிருப்பு அனுமதி விண்ணப்பங்களை பின்லாந்து பதிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 48 சதவீதம் அதிகமாக இருந்தது, அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தங்கள் படிப்பு இலக்காக பின்லாந்து நாட்டைத் தெரிவு செய்துள்ளனர்.

இந்த ஆண்டு இதுவரை படிப்பு நோக்கங்களுக்காக மாணவர் வீசாவுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பட்டப்படிப்பு மாணவர்கள் ஆகும்.

அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் பங்களாதேஷ், சீனா, இலங்கை, இந்தியா மற்றும் ரஷ்யாவிலிருந்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...