tamilni 43 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் வெடித்துள்ள சிறு போர்

Share

இலங்கையில் வெடித்துள்ள சிறு போர்

இலங்கையின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் சிறு போர் வெடித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

தமது அமைச்சர்கள், தங்களது பணிகளுக்கு இடம் தர மறுப்பதாக இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

அத்துடன் தங்களுக்கு உரிய நல்ல வாகனங்களோ அல்லது பிற வசதிகளோ வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தீவிரமாகியுள்ளதை அடுத்து, ஜனாதிபதி விக்ரமசிங்க இன்று(04.09.2023) ஜனாதிபதி செயலகத்தில் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்காக இராஜாங்க அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை எனவும் தமது அமைச்சகங்களுக்கு செயலாளர்கள் இல்லை எனவும் பல பிரச்சினைகளை இராஜாங்க அமைச்சர்கள் எதிர்கொள்கின்றனர்.

மேலும், நாளைய கூட்டத்திற்கு பின்னர் எந்த நேரத்திலும் சிறிய அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படலாம் என்று ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...