tamilni 46 scaled
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை போன்று திருகோணமலையிலும் ஏற்படும் நிலை

Share

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை போன்று திருகோணமலையிலும் ஏற்படும் நிலை

பேரினவாத ஆக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்தாவிட்டால் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இனப்படுகொலை சம்பவம் போன்று திருகோணமலையிலும் ஏற்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலை – சாம்பல்தீவு பாலத்திற்கு அருகில் சட்டவிரோத பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் தலைநகரமான திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்தும் திட்டமிட்டப்பட்ட வகையில் சூட்சுமமாக சிங்கள – பௌத்த பேரினவாதம் கபளீகரம் செய்து வருகின்றதை ஏற்றுக் கொள்ள முடியாது என கனகரத்தினம் சுகாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சைவ கிறிஸ்தவ ஆலயங்கள் அதிகம் காணப்படும் பகுதிகளில் திட்டமிடப்பட்ட வகையில் சட்டவிரோதமாக பிரதேசசபையின் அனுமதி இன்றி இன்னொரு பௌத்த விகாரை கட்டப்பட்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஜக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச நிறுவனங்கள் நாட்டில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு காலதாமதம் செய்யாது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இல்லையென்றால் முள்ளிவாய்க்காய் பகுதியில் இடம்பெற்ற இனப்படுகொலை சம்பவம் போன்று திருகோணமலையிலும் இடம்பெறும் எனவும் கனகரத்தினம் சுகாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...