tamilni 46 scaled
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை போன்று திருகோணமலையிலும் ஏற்படும் நிலை

Share

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை போன்று திருகோணமலையிலும் ஏற்படும் நிலை

பேரினவாத ஆக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்தாவிட்டால் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இனப்படுகொலை சம்பவம் போன்று திருகோணமலையிலும் ஏற்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலை – சாம்பல்தீவு பாலத்திற்கு அருகில் சட்டவிரோத பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் தலைநகரமான திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்தும் திட்டமிட்டப்பட்ட வகையில் சூட்சுமமாக சிங்கள – பௌத்த பேரினவாதம் கபளீகரம் செய்து வருகின்றதை ஏற்றுக் கொள்ள முடியாது என கனகரத்தினம் சுகாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சைவ கிறிஸ்தவ ஆலயங்கள் அதிகம் காணப்படும் பகுதிகளில் திட்டமிடப்பட்ட வகையில் சட்டவிரோதமாக பிரதேசசபையின் அனுமதி இன்றி இன்னொரு பௌத்த விகாரை கட்டப்பட்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஜக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச நிறுவனங்கள் நாட்டில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு காலதாமதம் செய்யாது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இல்லையென்றால் முள்ளிவாய்க்காய் பகுதியில் இடம்பெற்ற இனப்படுகொலை சம்பவம் போன்று திருகோணமலையிலும் இடம்பெறும் எனவும் கனகரத்தினம் சுகாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...