tamilni 28 scaled
இலங்கைசெய்திகள்

திட்டமிட்டு களமிறக்கப்படும் போலி சிங்கள துறவிகள்

Share

திட்டமிட்டு களமிறக்கப்படும் போலி சிங்கள துறவிகள்

இலங்கையில் 18 – 20 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து காவி உடை அணிவித்து அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் திட்டமொன்று அமுலில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் அரச புலனாய்வு பிரிவு தகவல் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, துறவு வாழ்க்கைக்கு அனுமதிக்கப்படும் இளைஞர்கள் போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் கவசமாகப் பயன்படுத்தப்படுவதாக புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதுவரை சுமார் 500 பேர் பயிற்சி பெற்று துறவிகளாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அரச புலனாய்வு பிரிவினர் இரகசிய அறிக்கையில் அரசாங்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் அரசியல் கட்சி இருப்பதாக புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலர் தமது அரசியல் கருத்துக்களை பரப்பும் வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் உரிய திணைக்களங்களின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென புலனாய்வுப் பிரிவினர் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக அரச உள்ளகமட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...