tamilni 28 scaled
இலங்கைசெய்திகள்

திட்டமிட்டு களமிறக்கப்படும் போலி சிங்கள துறவிகள்

Share

திட்டமிட்டு களமிறக்கப்படும் போலி சிங்கள துறவிகள்

இலங்கையில் 18 – 20 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து காவி உடை அணிவித்து அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் திட்டமொன்று அமுலில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் அரச புலனாய்வு பிரிவு தகவல் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, துறவு வாழ்க்கைக்கு அனுமதிக்கப்படும் இளைஞர்கள் போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் கவசமாகப் பயன்படுத்தப்படுவதாக புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதுவரை சுமார் 500 பேர் பயிற்சி பெற்று துறவிகளாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அரச புலனாய்வு பிரிவினர் இரகசிய அறிக்கையில் அரசாங்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் அரசியல் கட்சி இருப்பதாக புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலர் தமது அரசியல் கருத்துக்களை பரப்பும் வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் உரிய திணைக்களங்களின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென புலனாய்வுப் பிரிவினர் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக அரச உள்ளகமட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...