rtjy 19 scaled
இலங்கைசெய்திகள்

புதிய நிறுவனம் ஆரம்பித்து 24 மணிநேரத்திற்குள் அதிகரித்த எரிபொருளின் விலை!

Share

புதிய நிறுவனம் ஆரம்பித்து 24 மணிநேரத்திற்குள் அதிகரித்த எரிபொருளின் விலை!

புதிய நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனுவெவ தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பல்வேறு நாடுகளில் இருந்து வருகைத் தந்து எமது மக்களுக்கு நிவாரண ரீதியில் எரிபொருள் விநியோகிப்பதாக ஆரம்பத்தில் கூறியிருந்தனர்.

நிவாரணம் வழங்குவதாக கூறி எரிபொருள் நிறுவனத்தை ஆரம்பித்தனர். ஆரம்பித்த 24 மணி நேரத்திற்குள் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களை அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதனை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேநேரம் நிறுவனங்களுடன் இரகசிய டீல் வைத்த பின்னர் அவர்கள் இங்கு தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். தேவையான அளவில் விலையை அதிகரித்து தருகின்றோம். நீங்கள் விரும்பிய விலைக்கு விற்பனை செய்து அதில் எமக்கு பாதியை வழங்குங்கள் என்றே அவர்கள் கூறியுள்ளனர்.

அந்த சூட்சுமத்தை 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் புரிந்து கொண்டுள்ளோம். நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். இது ஊழல் மிகு டீல் ஆகும்.

பல்வேறு நிறுவனங்களின் பெயர்கள் இருந்தாலும் சில நிறுவனங்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் நண்பர்களின் மற்றும் உறவினர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவர்களுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கின்றது. இவை அனைத்தும் கறுப்பு பணம். மக்களுக்கு என்ன நடந்தாலும் அவர்கள் கவலையடைவதில்லை. அவர்களுக்கு பணம் கிடைத்தால் போதும் என குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...