இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ள 170000 பேர்

tamilni 1 scaled
Share

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ள 170000 பேர்

இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் சுமார் 170,000 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ளனர்.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 171,015 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று நாட்டை விட்டு சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் மட்டும் 24,578 பேர் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகள் பெற்று சென்றுள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டில் மொத்தமாக 311056 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ளனர்.

இதேவேளை கடந்த ஜூலை மாதம் வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட மொத்த பணம் 541 மில்லியன் டொலர் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மொத்த பணம் 279.5 மில்லியன் டாலர் என தெரிவிக்கப்படுகிறது.

ஒப்பீட்டளவில் இந்த ஆண்டில் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கைர்களினால் அனுப்பி வைக்கப்படும் பணத்தில் பாரிய அளவு அதிகரிப்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...