tamilni 409 scaled
இலங்கைசெய்திகள்

தமிழர் காணிகளில் 14 ஆயிரம் சிங்களவர்கள் குடியேற்றம் – ஒப்புக்கொண்ட எம்.பி

Share

தமிழர் காணிகளில் 14 ஆயிரம் சிங்களவர்கள் குடியேற்றம் – ஒப்புக்கொண்ட எம்.பி

சிங்களப் பகுதிகளில் தமிழ் மக்கள் வசிக்க முடியுமாயின், ஏன் தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்கள மக்கள் வசிக்க முடியாது என அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலனுடனான சந்திப்பில் பெரும்பான்மை சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வெளிப்படுத்தியுள்ளார்.

எனினும் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ் மக்களின் காணிகளுக்குரிய அனுமதிப்பத்திரங்கள் மீளெடுக்கப்பட்டு 14 ஆயிரத்திற்கும் அதிகமான சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டமை தொடர்பாக தாம் முன்வைத்த கருத்தை சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்றுக்கொண்டதாகவும் ஐ.பி.சி தமிழுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...