tamilni 410 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த துடிக்கும் தூதரகம்

Share

இலங்கை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த துடிக்கும் தூதரகம்

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் புதிய பிரதமரை நியமிப்பதற்கான இரகசிய நடவடிக்கையை மேற்கத்திய தூதரகம் ஆரம்பித்துள்ளதாகவும், அதன் பிரகாரம் முன்னாள் அதிபர் ஒருவர் மீண்டும் பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாகவும், அதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவு இருப்பதாகவும் கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படும் தினேஷுக்கு பல சக்திவாய்ந்த அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதற்கு பிரதமரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமரின் பதவியை மாற்றும் நடவடிக்கைக்கு பங்களித்த இந்த தூதரகம், தற்போதைய அதிபர் ரணிலை முன்னிலைப்படுத்துவதற்கான இரகசிய நடவடிக்கையையும் மேற்கொண்டதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்திருந்தன.

இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் கரியமில வைப்பு கொள்கையின் கீழ் இலங்கைக்கு 12 பில்லியன் டொலர்கள் கிடைக்க உள்ளதாகவும், இது முன்னாள் நோர்வே சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் உதவியுடன் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பணத்தில் அதிபர் தேர்தல் அல்லது பொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நாட்டிற்கான மேற்கத்தைய தூதுவர் இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாகச் செய்ய கடுமையாக உழைத்து வருகிறார், மேலும் அவர் இந்த நாட்களில் அரசியல் அரங்கில் முக்கிய நபராக மாறி வருகிறார்.

தினேஷ் குணவர்தன பிரதமர்பதவியில் இருந்து விலகி, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு அந்த பதவியை வழங்குமாறு பொதுஜன பெரமுன விடுத்த கோரிக்கை இதுவரை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தனவின் ஆதரவு இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், முன்னாள் அதிபர்களான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் இன்னும் அரசியல் களத்தில் இருப்பதுடன், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அரசியலில் இருந்து விலகி வீட்டில் ஓய்வெடுப்பது விசேட அம்சமாகும் என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 693ec68638296
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வவுனியாவில் 7739.5 ஏக்கர் நெற்செய்கை அழிவு: விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

வவுனியா மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள அனர்த்தம் காரணமாக, சுமார் 7739.5 ஏக்கர்...

13d5f9ce af20 4696 bf0a 60e56c536e64 1170x666 1
அரசியல்இலங்கைசெய்திகள்

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்: கோட்டாபய யாழ்ப்பாணம் வராததற்கான அச்சுறுத்தலைச் சத்தியக் கடதாசியில் சமர்ப்பிக்க உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் 2011ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவர்...

MediaFile 1 5
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பில் 270 டெங்கு நோயாளர்கள்: தேசிய ஒழிப்பு வாரத்தில் சோதனை நடவடிக்கை!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த ஆண்டில் சுமார் 270க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்...

articles2FBKUgBmfeEql9AyVpMBVO
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள்: கடற்படை பயிற்சி நிறைவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தல்!

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நேற்று (டிசம்பர் 13) பிற்பகல் நடைபெற்ற பயிற்சி நிறைவு...