tamilni 410 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த துடிக்கும் தூதரகம்

Share

இலங்கை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த துடிக்கும் தூதரகம்

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் புதிய பிரதமரை நியமிப்பதற்கான இரகசிய நடவடிக்கையை மேற்கத்திய தூதரகம் ஆரம்பித்துள்ளதாகவும், அதன் பிரகாரம் முன்னாள் அதிபர் ஒருவர் மீண்டும் பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாகவும், அதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவு இருப்பதாகவும் கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படும் தினேஷுக்கு பல சக்திவாய்ந்த அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதற்கு பிரதமரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமரின் பதவியை மாற்றும் நடவடிக்கைக்கு பங்களித்த இந்த தூதரகம், தற்போதைய அதிபர் ரணிலை முன்னிலைப்படுத்துவதற்கான இரகசிய நடவடிக்கையையும் மேற்கொண்டதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்திருந்தன.

இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் கரியமில வைப்பு கொள்கையின் கீழ் இலங்கைக்கு 12 பில்லியன் டொலர்கள் கிடைக்க உள்ளதாகவும், இது முன்னாள் நோர்வே சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் உதவியுடன் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பணத்தில் அதிபர் தேர்தல் அல்லது பொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நாட்டிற்கான மேற்கத்தைய தூதுவர் இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாகச் செய்ய கடுமையாக உழைத்து வருகிறார், மேலும் அவர் இந்த நாட்களில் அரசியல் அரங்கில் முக்கிய நபராக மாறி வருகிறார்.

தினேஷ் குணவர்தன பிரதமர்பதவியில் இருந்து விலகி, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு அந்த பதவியை வழங்குமாறு பொதுஜன பெரமுன விடுத்த கோரிக்கை இதுவரை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தனவின் ஆதரவு இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், முன்னாள் அதிபர்களான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் இன்னும் அரசியல் களத்தில் இருப்பதுடன், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அரசியலில் இருந்து விலகி வீட்டில் ஓய்வெடுப்பது விசேட அம்சமாகும் என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
121664732
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சை மாணவி 3 மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்துத் தற்கொலை முயற்சி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வைத்தியசாலையில் அனுமதி!

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி ஒருவர் இன்று...

images 2 3
செய்திகள்இலங்கை

நினைவேந்தல் காணி விவகாரம்: இரு தரப்பினரும் ஒற்றுமையாக வாருங்கள்; இல்லையேல் நல்லூர் நிலம் வழங்கப்படாது – முதல்வர் மதிவதனி அதிரடி அறிவிப்பு!

நவம்பர் 27 நினைவேந்தல் நிகழ்வைக் கொண்டாடுவது தொடர்பாகக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இன்மையால், இரு தரப்பினருக்கும்...

bk7qlddg hamas afp 625x300 19 February 25
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: 15 பாலஸ்தீனிய உடலங்களுக்குப் பதிலாக மேலும் ஒரு இஸ்ரேலிய வீரரின் உடலை ஹமாஸ் ஒப்படைத்தது!

எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற அபாயத்தில் இருக்கும் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அமுலாக்கம் தொடர்ந்து...

251107 Olivier Rioux ch 1044 acd69e
உலகம்செய்திகள்

7 அடி 9 அங்குல உயர கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ: உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரராக சாதனை!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ (Olivier Rioux),...