இலங்கைசெய்திகள்

யாழில் சிறுமியுடன் திருமணம்; பெற்றோருடன் கைது

Share
rtjy 291 scaled
Share

யாழில் சிறுமியுடன் திருமணம்; பெற்றோருடன் கைது

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் சிறுமியை சிறுமியுடன் குடும்பம் நடத்திய 21 வயதான இளைஞனும் அவரது பெற்றோரும் கைது செய்யப்பட்டு, விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று ந்பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கபப்ட்ட 17 வயதான சிறுமியும் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுமார் ஒன்றரை வருடங்களின் முன்னர் சிறுமிக்கும், இளைஞனுக்கும் காதல் ஏற்பட்டு, இருவரும் இளைஞனின் வீட்டில் ஒன்றாக வாழத் தொடங்கியுள்ளனர்.

எனினும், அண்மையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதை அடுத்து இருவரின் குடும்பத்தினருக்குள்ளும் தகராறு ஏற்பட்டது.

அதன் பின்னர் இந்த இளம் ஜோடி தற்போது பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், சிறுமியின் உறவை தொடர விரும்பவில்லையென்றும், சிறுமியின் குடும்பத்தினர் தொல்லை தருகின்றார்கள் என்றும் இளைஞனும், குடும்பத்தினரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றுள்ளனர்.

இதனையடுத்து பொலிசார், அவர்களின் முறைப்பாட்டை பெற்றுக் கொள்ளாமல் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் அவர்கள் மீது முறைப்பாடு பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தனர்.

அத்துடன் சிறுமியும் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதான 21 வயதான இளைஞன், தாய், தந்தை ஆகியோர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...