tamilni 380 scaled
இலங்கைசெய்திகள்

இனவாத நாடகத்தால் ஆட்சியைப் பிடிக்க முயல்வோருக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: சஜித்

Share

இனவாத நாடகத்தால் ஆட்சியைப் பிடிக்க முயல்வோருக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: சஜித்

ஆட்சியைப் பிடிப்பதற்காக 2019 இல் அரங்கேற்றிய இனவாத நாடகத்தின் இரண்டாவது பாகத்தைத் தற்போது அரங்கேற்றுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறானவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“13 என்கின்றனர், 13 பிளஸ் என்கின்றனர். இவை யாவும் போலியான வாக்குறுதிகளாகவே உள்ளன.

ஜனாதிபதி கனவில் உள்ள சிலர், தமது பதவிகளைத் தக்கவைத்துக்கொள்ளவும், சுகபோக வாழ்வுக்காகவும் மக்களை ஏமாற்றுவதற்கு முற்படுகின்றனர்.

2019 இல் மக்களை எவ்வாறு ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தார்களோ அதன் இரண்டாவது பாகத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

இனவாத ரீதியிலான பிரசாரங்கள் இதன் ஓர் அங்கமாகும். இனவாதம், மதவாதம் பரப்பி ஆட்சியைப் பிடித்தவர்களை மக்கள் விரட்டியடித்தனர் என்பதை நினைவில் வைத்துச் செயற்பட்டால் சிறந்தது.” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...