tamilni 360 scaled
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால் சிங்களவர்களின் தலைநகரில் ஏன் தங்கியுள்ளீர்

Share

வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால் சிங்களவர்களின் தலைநகரில் ஏன் தங்கியுள்ளீர்

வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் என்று கூறித் திரியும் தமிழ் அரசியல்வாதிகள் கொழும்பில் ஏன் தங்கியுள்ளார்கள் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வினவியுள்ளார்.

அத்துடன் கொழும்பு சிங்களவர்களின் தலைநகர் என்று அவர்களுக்குத் தெரியாதா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இலங்கை சிங்கள பௌத்த நாடு. இந்த நாட்டில் எந்த இடத்தையும் தமிழர்களுக்குச் சொந்தம் என்று தமிழ் அரசியல்வாதிகள் உரிமை கோர முடியாது.

வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் அல்ல. அங்கு மூவின மக்களும் வாழ்கின்றார்கள். இந்நிலையில், வடக்கு – கிழக்கில் மூவின மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கத் தமிழ் அரசியல்வாதிகள் முயல்கின்றார்கள்.

இதனால் தெற்கிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வடக்கு – கிழக்கில் விகாரைகளை நிறுவுதல் பௌத்த மயமாக்கல் எனில் தெற்கில் – கொழும்பில் இந்துக் கோயில்கள் கட்டப்பட்டமை இந்து மயமாக்கலா?

வடக்கு – கிழக்கில் சிங்களவர்கள் குடியேறுதல் சிங்கள மயமாக்கல் எனில் தெற்கில் – கொழும்பில் தமிழர்கள் குடியமர்ந்துள்ளமை தமிழர் மயமாக்கலா? தமிழ் அரசியல்வாதிகள் முதலில் வரலாற்றைப் படிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு பின்னால் வீசப்பட்ட கரு: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு பொலிஸார் தீவிர விசாரணை!

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கரு தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் சிசிடிவி கமராக்களின்...

28
இலங்கைசெய்திகள்

எரிபொருள் சேமிப்பு தொடர்ந்தால் மீண்டும் QR குறியீடு முறை: பிரதி அமைச்சர் எச்சரிக்கை!

பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருளைச் சேமிக்கத் (Hoarding) தொடங்கினால் மட்டுமே, மீண்டும் QR குறியீடு (QR...

27
உலகம்செய்திகள்

ஈரான் தலைவர் படுகொலை இழிவானது: ரஷ்ய அதிபர் புடின் கண்டனம் – பிராந்தியத்தில் ரஷ்யாவுக்குப் பின்னடைவு!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் கொலையை ஒரு...

26
அரசியல்இலங்கைசெய்திகள்

நிலக்கரி டெண்டர் பொய்: 13% மின் கட்டண உயர்வு மக்களை மேலும் நசுக்கும் – ரவி கருணாநாயக்க எச்சரிக்கை!

வரலாற்றில் முதல் முறையாக முறையான டெண்டர் நடைமுறை மூலம் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதாக அரசாங்கம் கூறுவது...