rtjy 254 scaled
இலங்கைசெய்திகள்

யாழ்.கசூரினா கடற்கரையில் கைதாகிய வெளிநாட்டவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

Share

யாழ்.கசூரினா கடற்கரையில் கைதாகிய வெளிநாட்டவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரையில் மது போதையில் குழப்பம் விளைவித்த ஆறு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து வவுனியாவிற்கு வந்தவர்கள்,நேற்று முன்தினம் கசூரினா கடற்கரைக்கு சென்று பொழுதைக் கழித்துள்ளனர்.

இதன்போது அவர்களில் ஒருவரின் மோதிரத்தை காணவில்லை என கடற்கரையில் கடமையில் இருந்த உயிர்காப்பு பிரிவை சேர்ந்த பொலிஸாருடன் முரண்பட்டுள்ளனர்.

அது தொடர்பில் உயிர்காப்பு பிரிவு பொலிஸார் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து கடற்கரைக்கு விரைந்த பொலிஸார் 6 ஆண்களையும் 4 பெண்களையும் கைது செய்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை 4 பெண்களை பிணையில் செல்ல அனுமதித்த மன்று 6 ஆண்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...