rtjy 252 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்

Share

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்

பிரமிட் திட்டங்களால் அவற்றின் சட்டபூர்வத்தன்மையை நிரூபிக்கும் நோக்கில் வெளியிடப்படும் கூற்றுக்களில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், அவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இணையவழித்தளங்கள் ஊடாக செயற்படும் சில பிரமிட் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யுமாறு பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவதாக தமக்குப் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

‘‘இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குவிதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இத்திட்டம் முதலீட்டாளர்களின் நிதியங்களைப் பாதுகாக்கின்றது. இத்திட்டம் உரிய வரிகளை அரசுக்குச் செலுத்துகின்றது, நிதியங்களை மீளப்பெறும் பொருட்டு இத்திட்டத்தில் பங்கேற்பவர்கள் தமது நிதியங்களிலிருந்து தனிப்பட்ட வருமான வரியை இலங்கை மத்திய வங்கிக்குச் செலுத்தவேண்டும். அன்றேல் அவர்களது நிதியங்கள் மத்திய வங்கியினால் முடக்கப்படும், இத்திட்டம் இலங்கை மத்திய வங்கியுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தது’ என்பன போன்ற விடயங்களே தமது திட்டத்தை நியாயப்படுத்துவதற்காக சில பிரமிட் திட்ட ஏற்பாட்டாளர்களால் கூறப்படுவதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.’’

இவ்வாறான கூற்றுக்களை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும், இக்கூற்றுக்களில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

எனவே இத்தகைய திட்டங்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடனும், விழிப்புடனும் செயற்படுமாறு மத்திய வங்கி பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

மேலும் இத்திட்டங்களில் முதலீடு செய்வதனூடாக பொதுமக்கள் பணத்தை இழக்கக்கூடும் என்பதனால், இவ்வாறான திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம் என்றும் மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் உரிமம் அளிக்கப்பட்டு, ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிறுவனங்களின் விபரங்களை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ வலைத்தளத்திலும், வெளிநாட்டுச்செலாவணித் திணைக்களத்தின் வலைத்தளத்திலும் பார்வையிட முடியும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...