tamilni 339 scaled
இலங்கைசெய்திகள்

ஹோட்டலுக்குள் நபர் செய்த மோசமான செயல்

Share

ஹோட்டலுக்குள் நபர் செய்த மோசமான செயல்

குளியாபிட்டியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்றிரவு 9.45 அளவில் – ஹெட்டிபொல வீதியில் குருடுகும்புர சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் படுகாயமடைந்த நிலையில், குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூனமல்தெனிய – அக்கரவத்தை பகுதியைச் சேர்ந்த “கொண்டயா” என அழைக்கப்படும் சந்தன செனரத் ஜயக்கொடி என்பவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த நபர் ஹெட்டிபொல – வஸ்வத்த பிரதேசத்தில் தங்கும் விடுதி ஒன்றை நடத்தி வருகின்றார். அவர் பலருடன் தகாத உறவுகளை வைத்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...

25 6939a5588b95b
இலங்கைசெய்திகள்

மூன்றாம் தவணையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைமை இல்லை: பரீட்சைகள் இரத்து!

இந்த ஆண்டு மூன்றாம் தவணை முடிவில் பாடசாலை மாணவர்களுக்கு எந்த விதத்திலும் மதிப்பெண் வழங்கும் முறைமை...

images 5 4
இந்தியாசெய்திகள்

13 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தமிழகத்தின் தூத்துக்குடியில் 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு...