tamilni 333 scaled
இலங்கைசெய்திகள்

வவுனியா இரட்டைக் கொலை! சிறையிலிருந்து பெண்ணொருவருடன் தொலைபேசியில் உரையாடியுள்ள சந்தேகநபர்

Share

வவுனியா இரட்டைக் கொலை! சிறையிலிருந்து பெண்ணொருவருடன் தொலைபேசியில் உரையாடியுள்ள சந்தேகநபர்

வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரிடம் இருந்து தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 23ஆம் திகதி அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த நபர்கள் அவ்வீட்டில் இருந்த ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.

இச்சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர்களான கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர்.

ஆறு பேர் கைது
குறித்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டதுடன், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் பிரதான சந்தேகநபர்கள் உட்பட 5 பேர் வவுனியா சிறைச்சாலையிலும், ஒருவர் அநுராதபுரம் சிறைச்சாலையிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வவுனியா சிறைச்சாலையில் இருந்த பிரதான சந்தேகநபர் தொலைபேசி பயன்படுத்தியுள்ளமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் கவனத்திற்கு இந்த சம்பவத்தை கொண்டு வந்ததையடுத்து இன்று (24.08.2023) அதிகாலை சிறைச்சாலையில் மேற்கொண்ட திடீர் சோதனையில் பிரதான சந்தேகநபரிடம் இருந்து கைத்தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சிறையில் வைத்து பயன்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி
குறித்த தொலைபேசியின் ஊடாக 3292 வெளிச் செல்லும் அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதுடன், அதில் 3 அழைப்புக்கள் குறித்த நபரின் மனைவிக்கும், பிறிதொரு பெண்ணுக்கு ஒன்றரை மணித்தியாலம் படி 35 தடவைகள் அழைப்பு மேற்கொண்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று குற்றப் புலனாய்வு திணைக்கள கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...