tamilni 273 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் கோடீஸ்வரரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அட்டகாசம்

Share

கொழும்பில் கோடீஸ்வரரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அட்டகாசம்

கொழும்பு, பொரளை லேக் டிரைவ் பகுதியில் வசிக்கும் கோடீஸ்வர சீன வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இனந்தெரியாத மூவரால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 19ஆம் திகதி இரவு Su Zu Qing என்ற 38 வயதான வர்த்தகர் ஒருவரின் வீட்டிலேயே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

தொழிலதிபரின் வீட்டிற்குள் நுழைந்த மூன்று கொள்ளையர்கள் வர்த்தகர், அவரது மொழிபெயர்ப்பாளர் மற்றும் சமையல்காரர் ஆகியோரை தாக்கியுள்ளனர்.

துப்பாக்கியைக் காட்டி கொலைமிரட்டல் விடுத்ததுடன் கை, கால்களையும் கட்டிவிட்டு திருடியுள்ளனர்.

இதன்போது டொலர் உட்பட பெருந்தொகை வெளிநாட்டு நாணயங்கள் 11 கையடக்க தொலைபேசிகள், 07 மடிக்கணினிகள், கைக்கடிகாரம், உள்ளூர் நாணயம், 05 வெளிநாட்டு மதுபான போத்தல்கள், சிசிடிவி அமைப்பின் டிவிஆர் பகுதி உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையர்களால் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...