இலங்கை மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவரும் டெங்கு
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவரும் டெங்கு

Share

இலங்கை மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவரும் டெங்கு

இலங்கையில் 2023 இல் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 60,000 ஐ கடந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய தொற்று நோயியல் பிரிவு வழங்கிய தகவலின் படி, 2023 ஜனவரி முதல் – ஜுலை 19 ஆம் திகதிவரை நாட்டில், மொத்தம் 60,136 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய அதிகபட்சமான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மேல் மாகாணத்தில் கிட்டத்தட்ட 30,000 தொற்றுகள் பதிவாகியுள்ளன எனவும், இது மாகாணங்களின் அடிப்படையில் மிக அதிகம் எனவும் கூறப்படுகிறது.

டெங்கு நோய் பரவும் இடங்கள் அதிகமாக காணப்படும் 43 அதிக ஆபத்துள்ள பகுதிகளை தொற்றுநோயியல் பிரிவு அடையாளம் கண்டுள்ளது.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் 3,446 டெங்கு தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும், இதற்கிடையில், ஜனவரி 2023 முதல் மொத்தம் 38 இறப்புகள் பதிவாகியுள்ளன எனவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...