tamilni 221 scaled
இலங்கைசெய்திகள்

விகாரையின் பணிகளை இடைநிறுத்திய ஆளுநர்! தொடரும் அழுத்தம்

Share

விகாரையின் பணிகளை இடைநிறுத்திய ஆளுநர்! தொடரும் அழுத்தம்

திருகோணமலை – நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த பௌத்த விகாரையின் நிர்மாண பணிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இடைநிறுத்தியுள்ளார்.

பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளை நிறுத்துமாறு கோரி பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில், இனமுரண்பாடு ஏற்படும் என கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து, விகாரையின் நிர்மாண பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அரசியல்வாதிகள் பலர் தொடர்ச்சியாக அழுத்தங்களை பிரயோகித்து வந்த நிலையில், தனது முடிவில் உறுதியாக உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பலாங்கொடை மிரிஷ்வத்த தம்மானந்த பிரிவென விகாரையின் கிளையான பலப்பிட்டிய அம்பருகாராமய விகாரையின் கிளை விகாரையான நிலாவெளியில் அமைக்கப்படவிருந்த விகாரை தொடர்பாக, உரிய விகாரைகளுக்கு சென்று, அங்குள்ள “விகாராதிபதிகளை சந்தித்து இப்பிரச்சினை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விளக்கமளித்துள்ளார்.

மேலும், விகாரையின் விகாராதிபதி விமல தம்மா மஹாநாயக்க தேரரை சந்தித்து கிழக்கு மாகாண ஆளுநர் என்ற வகையில் விகாரை அமைப்பதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் ஆளுநர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

நிலாவெளி, இலுப்பை குளம் பகுதி மக்களின் ஆதரவுடன் விகாரை அமைக்கப்படாமல், எதிர்ப்புக்கு மத்தியில் விகாரை அமைக்கப்படும் சந்தர்ப்பத்தில் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை ஏற்படுவதினை தடுக்க ஆளுநர் என்ற வகையில் தனது கடமையை செய்துள்ளதாகவும் ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.

எனவே இவ்விடயம் தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி சுமூகமான தீர்வினை பெற்று தருவதன் மூலம் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பலப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...