tamilni 221 scaled
இலங்கைசெய்திகள்

விகாரையின் பணிகளை இடைநிறுத்திய ஆளுநர்! தொடரும் அழுத்தம்

Share

விகாரையின் பணிகளை இடைநிறுத்திய ஆளுநர்! தொடரும் அழுத்தம்

திருகோணமலை – நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த பௌத்த விகாரையின் நிர்மாண பணிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இடைநிறுத்தியுள்ளார்.

பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளை நிறுத்துமாறு கோரி பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில், இனமுரண்பாடு ஏற்படும் என கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து, விகாரையின் நிர்மாண பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அரசியல்வாதிகள் பலர் தொடர்ச்சியாக அழுத்தங்களை பிரயோகித்து வந்த நிலையில், தனது முடிவில் உறுதியாக உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பலாங்கொடை மிரிஷ்வத்த தம்மானந்த பிரிவென விகாரையின் கிளையான பலப்பிட்டிய அம்பருகாராமய விகாரையின் கிளை விகாரையான நிலாவெளியில் அமைக்கப்படவிருந்த விகாரை தொடர்பாக, உரிய விகாரைகளுக்கு சென்று, அங்குள்ள “விகாராதிபதிகளை சந்தித்து இப்பிரச்சினை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விளக்கமளித்துள்ளார்.

மேலும், விகாரையின் விகாராதிபதி விமல தம்மா மஹாநாயக்க தேரரை சந்தித்து கிழக்கு மாகாண ஆளுநர் என்ற வகையில் விகாரை அமைப்பதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் ஆளுநர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

நிலாவெளி, இலுப்பை குளம் பகுதி மக்களின் ஆதரவுடன் விகாரை அமைக்கப்படாமல், எதிர்ப்புக்கு மத்தியில் விகாரை அமைக்கப்படும் சந்தர்ப்பத்தில் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை ஏற்படுவதினை தடுக்க ஆளுநர் என்ற வகையில் தனது கடமையை செய்துள்ளதாகவும் ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.

எனவே இவ்விடயம் தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி சுமூகமான தீர்வினை பெற்று தருவதன் மூலம் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பலப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...