tamilni 221 scaled
இலங்கைசெய்திகள்

விகாரையின் பணிகளை இடைநிறுத்திய ஆளுநர்! தொடரும் அழுத்தம்

Share

விகாரையின் பணிகளை இடைநிறுத்திய ஆளுநர்! தொடரும் அழுத்தம்

திருகோணமலை – நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த பௌத்த விகாரையின் நிர்மாண பணிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இடைநிறுத்தியுள்ளார்.

பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளை நிறுத்துமாறு கோரி பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில், இனமுரண்பாடு ஏற்படும் என கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து, விகாரையின் நிர்மாண பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அரசியல்வாதிகள் பலர் தொடர்ச்சியாக அழுத்தங்களை பிரயோகித்து வந்த நிலையில், தனது முடிவில் உறுதியாக உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பலாங்கொடை மிரிஷ்வத்த தம்மானந்த பிரிவென விகாரையின் கிளையான பலப்பிட்டிய அம்பருகாராமய விகாரையின் கிளை விகாரையான நிலாவெளியில் அமைக்கப்படவிருந்த விகாரை தொடர்பாக, உரிய விகாரைகளுக்கு சென்று, அங்குள்ள “விகாராதிபதிகளை சந்தித்து இப்பிரச்சினை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விளக்கமளித்துள்ளார்.

மேலும், விகாரையின் விகாராதிபதி விமல தம்மா மஹாநாயக்க தேரரை சந்தித்து கிழக்கு மாகாண ஆளுநர் என்ற வகையில் விகாரை அமைப்பதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் ஆளுநர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

நிலாவெளி, இலுப்பை குளம் பகுதி மக்களின் ஆதரவுடன் விகாரை அமைக்கப்படாமல், எதிர்ப்புக்கு மத்தியில் விகாரை அமைக்கப்படும் சந்தர்ப்பத்தில் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை ஏற்படுவதினை தடுக்க ஆளுநர் என்ற வகையில் தனது கடமையை செய்துள்ளதாகவும் ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.

எனவே இவ்விடயம் தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி சுமூகமான தீர்வினை பெற்று தருவதன் மூலம் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பலப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 108
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு விசேட எரிபொருள் ஒதுக்கீடு: அரசாங்கத்தின் புதிய திட்டம் குறித்து அறிவிப்பு!

இலங்கையிலுள்ள பெரிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் செயல்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக...

world 107
செய்திகள்உலகம்

ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: கவலையின்றி UFC சண்டையைக் கண்டுகளித்த டொனால்ட் டிரம்ப்!

மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஈரானுடன் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட மிக முக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித...

world 106
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையிலிருந்து வெலிசராவுக்கு மாற்றப்பட்ட 7 முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவர்கள்!

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்த ஏழு முக்கிய தலைவர்கள், பூசா உயர் பாதுகாப்புச் சிறையிலிருந்து...

world 101
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: போர் நிறுத்தத்தைத் தொடர ஆஸ்திரேலியா வலியுறுத்தல்!

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி முடிவடைந்ததைத்...