மிகக்குறைந்த வருமானம் கொண்ட நாடாக இலங்கை
இலங்கைசெய்திகள்

மிகக்குறைந்த வருமானம் கொண்ட நாடாக இலங்கை

Share

மிகக்குறைந்த வருமானம் கொண்ட நாடாக இலங்கை

மிகக் குறைந்த வருமானத்தைக் கொண்ட நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

தெற்காசியப் பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும் போது இவ்வாறு இலங்கை மிகக் குறைந்த வருமானம் கொண்ட நாடாக காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெரிடே ரிசர்ச் என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த 17 வருடங்களில் இலங்கை தமது வருமான இலக்குகளை அடையத் தவறியுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தில் வருவாயை அதிகரிப்பதற்கான உடன்பாட்டையும் இலங்கை உள்ளடக்கியுள்ளது. எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் வருமான இலக்குகள் தொடர்பான 12 நிகழ்ச்சி திட்டங்களில் 3 திட்டங்களை மட்டுமே இலங்கை எட்டியுள்ளதாக வெரிடே ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்க வருவாயை ஈட்டுவதில் வரி வருவாய் கணிசமான பங்கை வகிக்கிறது எனவும் இந்த ஆண்டு வரி வருவாய் மூவாயிரத்து 130 பில்லியன் ரூபாவாக இருக்கும் எனவும் அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த வருட இறுதிக்குள் இலங்கை அரசாங்கத்தின் கணிப்பை விட குறைந்த வருமானத்தை அதாவது 2 ஆயிரத்து 940 பில்லியன் ரூபா வரி வருவாயைப் பெறும் என சர்வதேச நாணய நிதியம் மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளது.

எனினும், வருடத்தின் முதல் காலாண்டில் 578 பில்லியன் ரூபா மாத்திரமே உண்மையான வரி வருவாயாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி வருட இறுதிக்குள் 2 ஆயிரத்து 762 பில்லியன் ரூபாவை மட்டுமே ஈட்டமுடியும் எனவும் வெரிடே ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 1
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு: பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் இன்று பெரிய அளவிலான உயர்வு காணப்பட்டுள்ளது. கடந்த சில...

29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு பின்னால் வீசப்பட்ட கரு: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு பொலிஸார் தீவிர விசாரணை!

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கரு தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் சிசிடிவி கமராக்களின்...

28
இலங்கைசெய்திகள்

எரிபொருள் சேமிப்பு தொடர்ந்தால் மீண்டும் QR குறியீடு முறை: பிரதி அமைச்சர் எச்சரிக்கை!

பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருளைச் சேமிக்கத் (Hoarding) தொடங்கினால் மட்டுமே, மீண்டும் QR குறியீடு (QR...

27
உலகம்செய்திகள்

ஈரான் தலைவர் படுகொலை இழிவானது: ரஷ்ய அதிபர் புடின் கண்டனம் – பிராந்தியத்தில் ரஷ்யாவுக்குப் பின்னடைவு!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் கொலையை ஒரு...