மதிவதனி - துவாரகா உயிருடன் - பாதுகாப்பு அமைச்சு பதில்
இலங்கைசெய்திகள்

மதிவதனி – துவாரகா விடயத்தில் தயக்கம் காட்டும் இலங்கை இராணுவம்

Share

மதிவதனி – துவாரகா விடயத்தில் தயக்கம் காட்டும் இலங்கை இராணுவம்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் துணைவியாரான மதிவதனி மற்றும் புதல்வி துவாரகா ஆகியோர் இறுதி யுத்ததில் உயிரிழந்தார்களாக என்பதை வெளிப்படுத்த இலங்கை இராணுவம் தயக்கம் காட்டியுள்ளது.

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறித்த இருவர் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு எதுவோ அதுவே இராணுவத்தின் நிலைப்பாடு என இராணு பேச்காளர் பிரிஹேடியர் ரவி ஹேரத் எமது ஊடக பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார் என உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழநெடுமாறன் அண்மையில் கூறியிருந்தார்.

இவ்வாறான சூழலில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் துணைவியாரான மதிவதனி மற்றும் புதல்வி துவாரகாவை தான் நேரடியாக சந்தித்தாக மதிவதனியின் சகோதரி கூறிய கருத்து தமிழ் சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது.

டென்மார்க்கில் வசிக்கும் இவர், ஒரு காணொளிப்பதிவின் ஊடாக இந்தக்கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா இராணு பேச்சாளர் பிரிஹேடியர் ரவி ஹேரத்தை தொடர்பு கொண்டு எமது செய்தி பிரிவு வினவிய போது, அவர்கள் இறுதிக யுத்ததில் உயிரிழந்தார்களாக என்பதை வெளிப்படையாக கூற தயங்கியுள்ளார்.

இந்த தகவல்களின் பின்னணியில் சர்வதேச நிகழ்ச்சி உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த இராணுவ பேச்சாளர் அதனை உறுதிப்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் துணைவி மற்றும் புதல்வி குறித்த செய்தி நகைப்புக்குரியது என ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் |கேணல் நலின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவொரு நாடகம் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் துணைவியாரான மதிவதனி மற்றும் புதல்வி துவாரகா ஆகியோர் உயிருடன் உள்ளனர் என வெளியிடப்பட்டுள்ள செய்தி நகைப்புக்குரியது என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேணல் நலின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

மதிவதனி மற்றும் மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாகவும், மிக அண்மையில் இருவரையும் சந்தித்ததாகவும், அவர்களுடன் உணவு உண்டதாகவும் டென்மார்க்கில் வசிக்கும் மதிவதனியின் சகோதரி காணொளி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நலின் ஹேரத், தனது கவனத்தை ஈர்த்துக்கொள்ளும் வகையில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதுவொரு போலியான நாடகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரையும் தான் நேரடியாக சந்தித்தாக மதிவதனியின் சகோதரி கூறிய கருத்து தமிழ் சமூக வலைத்தள பரப்பில் எதிர்வினைகளையும் பரபரப்பையும் தொடர்ந்தும் உருவாக்கி வருகிறது.

டென்மார்க்கில் வசிக்கும் இவர், ஒரு காணொளிப் பதிவின் ஊடாக இந்தக் கருத்தை வெளிப்படுத்திய நிலையில் இந்தக் காணொளியை மையப்படுத்திய கலவையான எதிர்வினைகள் வெளிப்பட்டுள்ளன.

மதிவதனி மற்றும் துவாரகா ஆகியோரை தான் நேரடியாக சந்தித்தாக அவருடைய சகோதரி வெளியிட்ட காணொளி பின்வருமாறு..

Share
தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

25 690304e16a39e
அரசியல்இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: ஆயுதம் கோரிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், வெளிநாட்டிலிருந்து தற்காப்புக்காக மூன்று ஆபத்தான மிளகு ஸ்ப்ரேக்கள்...

25 690332f7d691e
இலங்கைஉலகம்செய்திகள்

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற இருப்பவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

2025 ஒக்டோபர் 27 ஆம் திகதி, கனடா அரசாங்கம் தனது Express Entry அமைப்பின் மாகாண...

25 690349f3051fc
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றில் கேலிக்கூத்து நடக்கிறது; வயது முதிர்ந்த ரணிலை விடுங்கள் – டயானா கமகே

ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் கட்சிக்குள் இளைஞர்களை சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு தலைமைப் பதவியை...