ஒவ்வாமையால் 10 மரணங்கள் - மறைக்கப்படும் மர்மங்கள்
இலங்கைசெய்திகள்

ஒவ்வாமையால் 10 மரணங்கள் – மறைக்கப்படும் மர்மங்கள்

Share

ஒவ்வாமையால் 10 மரணங்கள் – மறைக்கப்படும் மர்மங்கள்

மூன்று மாதங்களில் சுமார் 10 ஒவ்வாமை மரணங்கள் ஏற்படுவது இயல்பானதா என்பதை சுகாதார அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சமல் சஞ்சீவ இந்த விடயத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மருந்துப் பாவனையால் நோயாளிகள் உயிரிழந்தமை தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

குழு நியமித்து 48 மணித்தியாலங்களின் பின்னர் கம்பஹா வைத்தியசாலையில் மற்றுமொரு நோயாளி மரணம் பதிவாகியுள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

Ceftazidime எனும் சக்தி வாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பியின் 11வது ஊசியின் பின்னர் மரணம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அது ஒரு போதும் சாதாரண நிலைமை அல்ல எனவும் சுகாதார அமைச்சின் உண்மையான பிரச்சினையை மூடி மறைப்பதற்காக வெளியிடும் ஊடக அறிக்கை ஊடாக அமைச்சு மக்களை நகைச்சுசையாக எண்ணியுள்ளார்கள் என அவர் மேலும் தெரிலித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...