ஊழியர் சேமலாப நிதிய தீர்மானம் தொடர்பில் அனுரகுமார கடும் கண்டனம்
இலங்கைசெய்திகள்

ஊழியர் சேமலாப நிதிய தீர்மானம் தொடர்பில் அனுரகுமார கடும் கண்டனம்

Share

ஊழியர் சேமலாப நிதிய தீர்மானம் தொடர்பில் அனுரகுமார கடும் கண்டனம்

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த தினத்தன்று, நாடாளுமன்றத்தின் நிதி அதிகாரத்தை எந்த நீதிமன்றத்திலும் சவாலுக்குட்படுத்த முடியாது அதிகாரமில்லை என சபாநாயகர் விடுத்த அறிவிப்பு முற்றிலும் தவறானதுடன் அரசியலமைப்பு மீறலாகும்.

கடன் மறுசீரமைப்பு யோசனையை தவிர சட்டமூலமல்ல, அரசாங்கத்தின் யோசனைகளை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியாது என்றால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை எவ்வாறு பாதுகாக்கப்படும்.

ஆகவே தவறான அறிவிப்பை மீளப் பெற்றுக்கொள்ளுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

சபாநாயகரின் அறிவிப்புக்களை சவாலுக்குட்படுத்த கூடாது என்ற சம்பிரதாயம் நடைமுறையில் காணப்படுகிறது. இருப்பினும் சபாநாயகரின் அறிவிப்பு நாடாளுமன்றத்தினதும், நாட்டின் ஏனைய செயற்பாடுகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்பதால் இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...