வாகன சாரதியை மிரட்டி ஆயுதமுனையில் வாகனம் கடத்தல்!
இலங்கைசெய்திகள்

வாகன சாரதியை மிரட்டி ஆயுதமுனையில் வாகனம் கடத்தல்!

Share

வாகன சாரதியை மிரட்டி ஆயுதமுனையில் வாகனம் கடத்தல்!

இரத்தினபுரி – அயகம பகுதியில் ஆயுதங்களை காட்டி மிரட்டி வாகனமொன்று கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

அயகம, தேயிலை கொலனி – பொகஹவன்குவா பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்றுமுன் தினம் இரவு (05) வாடகைக்கு செல்வதாக கூறி காரொன்றினை இடைமறித்து இருவர் வாகனத்தில் ஏறியுள்ளனர்.

இதன்போது காரில் சென்றவர்கள் சாரதிக்கு தயிர் கொடுத்துள்ளனர். அதனை பருக சாரதி மறுத்ததால் வலுக்கட்டாயமாக குடிக்க கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்பின்னர் சாரதியை ஆயுதங்களைக் காட்டி மிரட்டி காரில் இருந்து இறக்கிவிட்டு துப்பாக்கி முனையில் வாகனத்தை கடத்திச் சென்றுள்ளதாக அயகம பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதுடன், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபர்கள் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சாரதியின் பணப்பையையும் எடுத்துச்சென்றுள்ளதுடன், சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Pregnant Child 1200px 25 07 18 1 1000x600 1
செய்திகள்இலங்கை

கர்ப்பிணித் தாய்மார்கள் போதைப்பொருள் பாவனை: குழந்தைகளின் அபாயம் குறித்து அமைச்சர் சரோஜா போல்ராஜ் எச்சரிக்கை!

சமீபகாலமாகப் பெண்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது அதிகரித்து வருவதாகவும், குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

Nine Arch Bridge Ella Sri Lanka 35 1
செய்திகள்இலங்கை

ஒன்பது வளைவுப் பாலம் விளக்குத் திட்டம் ஒத்திவைப்பு: தனியாரின் நிலப் பிரச்சினை காரணம்!

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில்...

articles2FjYITDpH4jwEQ9VfnNT42
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் புதிய கிளை அலுவலகம் இன்று திறந்து வைப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் கிளைக்கான புதிய அலுவலகம் இன்று (நவம்பர் 23) காலை,...

images 5 1
செய்திகள்உலகம்

லண்டனில் பலஸ்தீன ஆதரவுக் குழு தடையை எதிர்த்துப் போராட்டம்: 90 பேர் கைது!

பிரித்தானிய அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவொன்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அதற்கு...