மத்திய வங்கியின் செயற்பாட்டினால் நெருக்கடியில் வங்கிகள்
இலங்கைசெய்திகள்

மத்திய வங்கியின் செயற்பாட்டினால் நெருக்கடியில் வங்கிகள்

Share

மத்திய வங்கியின் செயற்பாட்டினால் நெருக்கடியில் வங்கிகள்

இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு வட்டி வீதங்கள் ஒரே நேரத்தில் செயற்படுத்தப்படுவதால் வங்கி வைப்புக்கள் தொடர்பில் பாரிய குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத வர்த்தக வங்கியின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​இலங்கை மத்திய வங்கியால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள கொள்கை வட்டி விகிதங்கள் வங்கி வைப்புகளுக்கு 11 சதவீதம் மற்றும் கடன்களுக்கு 12 சதவீதமாகும்.

இந்த வட்டி விகிதங்களை நடைமுறைப்படுத்துவதற்கு வர்த்தக வங்கிகளை மத்திய வங்கி கட்டாயப்படுத்தியுள்ளது.

இருந்த போதிலும்,நாட்டின் பாதுகாப்பான வைப்புத் தொகையாகக் கருதப்படும் திறைசேரி உண்டியல்கள் மீது 20 சதவீத வட்டியை மத்திய வங்கி செலுத்துகிறது.

இதன் காரணமாக வர்த்தக வங்கிகள் மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் வைப்புத்தொகையை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வங்கி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

வங்கி வட்டி தொடர்பில் மத்திய வங்கி இரண்டு கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் 19 சதவீத வட்டி விகிதத்தில் கூட திறைசேரி உண்டியல்களை தேவையான தொகைக்கு விற்க முடியாத நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில் நாட்டின் வங்கி வட்டி விகிதங்கள் கண்டிப்பாக அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், சில தனியார் நிதி நிறுவனங்கள் தங்கள் வருடாந்திர வட்டி விகிதங்கள் 22 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை இருக்கும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 690416ca1b001
செய்திகள்இலங்கை

வானிலை அறிக்கை: சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இலங்கையின் சில பகுதிகளில் இன்று (அக்31) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...

25 6903a9422debc
செய்திகள்உலகம்

சீனா மீதான வரி 57% இலிருந்து 47% ஆகக் குறைப்பு: ட்ரம்ப் அறிவிப்பு – இரு நாட்டு உறவுகள் குறித்து ஜி ஜின்பிங் உறுதி

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற...

images
செய்திகள்இலங்கை

2024 மக்கள் தொகை கணக்கெடுப்பு: மொனராகலை மாவட்டத்தில் அதிகபட்ச எழுத்தறிவு

மக்கள் தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள 2024 மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகளின்படி, மாவட்டங்களுக்கிடையேயான...

25 6902b801c3b01
செய்திகள்இலங்கை

ஓடுதளம் தேவையில்லாத, AI-இயங்கும் உலகின் முதல் போர் விமானத்தை உருவாக்கியது அமெரிக்கா!

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஒரு தனியார் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய உலகின்...