மத்திய வங்கியின் செயற்பாட்டினால் நெருக்கடியில் வங்கிகள்
இலங்கைசெய்திகள்

மத்திய வங்கியின் செயற்பாட்டினால் நெருக்கடியில் வங்கிகள்

Share

மத்திய வங்கியின் செயற்பாட்டினால் நெருக்கடியில் வங்கிகள்

இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு வட்டி வீதங்கள் ஒரே நேரத்தில் செயற்படுத்தப்படுவதால் வங்கி வைப்புக்கள் தொடர்பில் பாரிய குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத வர்த்தக வங்கியின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​இலங்கை மத்திய வங்கியால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள கொள்கை வட்டி விகிதங்கள் வங்கி வைப்புகளுக்கு 11 சதவீதம் மற்றும் கடன்களுக்கு 12 சதவீதமாகும்.

இந்த வட்டி விகிதங்களை நடைமுறைப்படுத்துவதற்கு வர்த்தக வங்கிகளை மத்திய வங்கி கட்டாயப்படுத்தியுள்ளது.

இருந்த போதிலும்,நாட்டின் பாதுகாப்பான வைப்புத் தொகையாகக் கருதப்படும் திறைசேரி உண்டியல்கள் மீது 20 சதவீத வட்டியை மத்திய வங்கி செலுத்துகிறது.

இதன் காரணமாக வர்த்தக வங்கிகள் மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் வைப்புத்தொகையை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வங்கி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

வங்கி வட்டி தொடர்பில் மத்திய வங்கி இரண்டு கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் 19 சதவீத வட்டி விகிதத்தில் கூட திறைசேரி உண்டியல்களை தேவையான தொகைக்கு விற்க முடியாத நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில் நாட்டின் வங்கி வட்டி விகிதங்கள் கண்டிப்பாக அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், சில தனியார் நிதி நிறுவனங்கள் தங்கள் வருடாந்திர வட்டி விகிதங்கள் 22 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை இருக்கும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...