நாட்டை விட்டு வெளியேறியுள்ள 2000 விரிவுரையாளர்கள்
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு வெளியேறியுள்ள 2000 விரிவுரையாளர்கள்

Share

நாட்டை விட்டு வெளியேறியுள்ள 2000 விரிவுரையாளர்கள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் (UGC) பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி, கடந்த ஒன்றரை வருடங்களில் கிட்டத்தட்ட 2,000 விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர், இதில் கடந்த 6 மாதங்களில் 600 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் எ‌ன்று‌ பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA), தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன தெரிவித்தார்.

நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் 11,900 விரிவுரையாளர்கள் இருக்க வேண்டும், ஆனால் தற்போது,600 பேர் மட்டுமே உள்ளனர்.

பெ ரும்பாலான விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி நாடு திரும்பவில்லை.அவர்களில் பெரும்பாலோர் சேவையை விட்டு வெளியேறியதாக அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“2017 ஆம் ஆண்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் 30,000 புதிய மாணவர் சேர்க்கைகள் மட்டுமே நடந்துள்ளன. பின்னர், 2021 இல் 34,000 ஆக அதிகரிக்கப்பட்டது, இது 2017 உடன் ஒப்பிடும்போது 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

எனினும் துரதிர்ஷ்டவசமாக,புதிய விரிவுரையாளர் நியமனங்களின் எண்ணிக்கை 2017 க்குப் பிறகு அதிகரிக்கவில்லை என பேராசிரியர் ஜெயவர்தன தெரிவித்தார்.

மேலும், விரிவுரையாளர்களுக்கு சில நிவாரணங்களை வழங்குவதாக கடந்த மார்ச் மாதம் அரசாங்கம் உறுதியளித்த போதிலும் இதுவரையில் எதுவும் நடக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

துரதிஷ்டவசமாக பொருளாதார வீழ்ச்சி காரணமாக புதிய விரிவுரையாளர்களை நியமிப்பதை அரசாங்கம் நிறுத்தியுள்ளது.

இந்தநிலையில் கடந்த 6 மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய விரிவுரையாளர்களுக்கு பதிலாக புதிய நியமனங்களை வழங்குமாறு ஜனாதிபதி அந்தந்த அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், விரிவுரையாளர்களை ஏற்கனவே உள்ள தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வெளிநாட்டு பயிற்சி தேவை.

அவர்களுக்கு வெளிநாட்டு பயிற்சி அளிக்கப்பட்டால், அவர்கள் நாடு திரும்புவது சந்தேகம் என்றும் பேராசிரியர் ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 1
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இஷாரா செவ்வந்தி, கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி...

11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...