பேராதனை பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்களுக்கு சிக்கல்!
இலங்கைசெய்திகள்

பேராதனை பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்களுக்கு சிக்கல்!

Share

பேராதனை பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்களுக்கு சிக்கல்!

பேராதனை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலர் வெளியேறியுள்ளமையினால் பல்கலைக்கழகத்தின் பல பீடங்களில் தினசரி கற்கை நெறிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உள்ளகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 2022 முதல் இந்த ஆண்டு மே வரை 70 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தரும், ஊடகப் பேச்சாளருமான பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித்திடம் நடத்திய விசாரணையில் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பேராசிரியர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வது உண்மைதான். இது முக்கியமாக மருத்துவ பீடம், பொறியியல் பீடம், அறிவியல் பீடம் மற்றும் பல் மருத்துவ பீடம் ஆகியவற்றை பாதித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் இவ்வருடம் மே மாதம் வரையிலான 16 மாதங்களில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னணி பேராசிரியர்கள் 70 பேர் பல்கலைக்கழகத்தை விட்டு முற்றாக வெளியேறி வெளிநாடு சென்றுள்ளனர். ஏராளமானோர் படிப்பு விடுப்பு எடுத்து வெளிநாடு சென்றுள்ளதாகவும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...