இலங்கை செஞ்சிலுவை சங்க நிர்வாகம் கலைப்பு - எழுந்த குற்றச்சாட்டு!
இலங்கைசெய்திகள்

இலங்கை செஞ்சிலுவை சங்க நிர்வாகம் கலைப்பு – எழுந்த குற்றச்சாட்டு!

Share

இலங்கை செஞ்சிலுவை சங்க நிர்வாகம் கலைப்பு – எழுந்த குற்றச்சாட்டு!

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் சட்ட விரோதமான முறையில் தெரிவு செய்யப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய செயலாளர் எஸ். எஸ் .நிமால்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

திருகோணமலை கிரீன் வீதியில் உள்ள மண்டபமொன்றில் இன்று (30.07.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “நாங்கள் தற்பொழுதும் நிர்வாக குழுவாகவே இயங்கி வருகின்றோம். மேலும், ஒரு குழு இடைக்கால குழுவை அமைத்து செயற்பட்டு கொண்டிருக்கின்றது.

எங்களுக்கு அறிவித்தல் விடாமல் அவர்கள் நிர்வாகத்தை தெரிவு செய்து காரியாலயத்தை கைப்பற்றி செயற்பட்டு கொண்டு வகிறது.

இதேவேளை ஒவ்வொரு மாவட்ட கிளைகளிலும் கிளை உத்தியோகத்தர்களின் உதவியுடன் வங்கி விபரங்களை மாற்றி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், குறித்த இடைக்கால நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...