பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சு அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சு அறிவிப்பு

Share

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சு அறிவிப்பு

2024 பாடசாலைகளின் முதலாம் தவணை பெப்ரவரி மாதம் 21ம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2023 கல்வியாண்டின் 2ம் தவணை ஓகஸ்ட் மாதம் 17ம் திகதி முடிவடையவுள்ளது. 2023ம் ஆண்டின் 3ம் தவணை 16ம் திகதி முடிவடையவுள்ளதாக கல்வி அமைச்சர்ம சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்திற்கான பாடசாலைப் பாடப்புத்தகங்களை அச்சிடும் நடவடிக்கை தற்சமயம் இடம்பெறுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலினால் பாடசாலைகள் மூடப்பட்டதையடுத்து ஏற்பட்ட தாமதங்கனை சீர்செய்யும் நோக்கோடு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தரம் ஐந்து புலமைப் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை என்பனவற்றை உரிய காலப்பகுதியில் நடத்தி முடிப்பது இந்தத் தவணை மாற்றத்தின் பிரதான நோக்கமாகும்.

இதேவேளை பாடசாலை அதிபர்களுக்கு நிதி அலுவலக நிர்வாக நடவடிக்கைகளை இலகுவான முறையில் மேற்கொள்வதற்கான அபிவிருத்தி அதிகாரிகளுடன் கூடிய புதிய சேவை ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வியமைச்சர் சுசில் பிறேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு மின்சாரம், நீர்விநியோக கட்டணப் பட்டியல்களில் சலுகையை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...