இலங்கை

சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இந்தியத் தூதுவருடன் சந்திப்பு

Published

on

சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இந்தியத் தூதுவருடன் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியப் பயணத்தை முடித்து நாடு திரும்பியுள்ள நிலையில், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரையும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

குறித்த சந்திப்பு கொழும்பில் நாளைமறுதினம் (01.08.2023) செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியப் பயணத்தின் போதான உறுதிமொழிகள், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நடத்திய சர்வகட்சிக் கூட்டம் என்பன தொடர்பில் ஆராயப்படும் என்று தெரிகின்றது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version