இலங்கை

அஸ்வெசும வங்கி கணக்கு திறக்க காத்திருப்போருக்கு மக்கள் வங்கியின் அறிவிப்பு

Published

on

அஸ்வெசும வங்கி கணக்கு திறக்க காத்திருப்போருக்கு மக்கள் வங்கியின் அறிவிப்பு

அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து மக்கள் வங்கி கிளைகளும் இன்று(29.07.2023) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி அஸ்வெசும வங்கி கணக்குகளைத் திறந்து கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று காலை 8.30 மணி முதல் அனைத்து மக்கள் வங்கி கிளைகளும் இதற்காக திறந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தேவை ஏற்படின் நாளை(30.07.2023) ஞாயிற்றுக்கிழமையும் வங்கி கிளைகளை திறக்க நடவடிக்கை எடுப்பதாக அம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version