இலங்கை
இலங்கை வந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன்


இலங்கை வந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன்
பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இலங்கை வந்தடைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதியுடன், அந்நாட்டின் ஐரோப்பிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவும் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் அவர் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விஜயத்தின் போது பிரான்ஸ் ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் இருதரப்பு கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.
You must be logged in to post a comment Login