புத்தளத்தில் மாயமான 2 சிறுமிகளை தேடி பொலிஸார் விசாரணை
இலங்கைசெய்திகள்

புத்தளத்தில் மாயமான 2 சிறுமிகளை தேடி பொலிஸார் விசாரணை

Share

புத்தளத்தில் மாயமான 2 சிறுமிகளை தேடி பொலிஸார் விசாரணை

புத்தளம் – முந்தலம பொலிஸ் பிரிவிட்க்குட்பட்ட பிரதேசமொன்றில் 15 வயதுடைய இரண்டு இரட்டைச் சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இருவரும் நேற்று முன்தினம் முதல்(25.07.2023) வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக முந்தலம பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் காணாமல்போயுள்ள இரட்டை பெண் சிறுமியர் தொடர்பில் அவர்களின் தாயார் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முந்தலகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சிறுமிகளின் நண்பர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்களுடன் கதிர்காமத்திற்கு புனித யாத்திரை செல்வதாகவும், அந்த பயணத்திற்கு செல்வதற்கு தாயாரிடம் அனுமதி கேட்டதாகவும் தாய் அனுமதி வழங்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறுமிகள் தமது தாயாரிடம் 500 ரூபாவை கேட்டதாகவும், ஆனால் அந்தத் தொகையை தாய் வழங்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...