இலங்கைசெய்திகள்

தூக்கத்தை தொலைத்த மாணவிகள்!! வெளியான காரணம்

தூக்கத்தை தொலைத்த மாணவிகள்!! வெளியான காரணம்
தூக்கத்தை தொலைத்த மாணவிகள்!! வெளியான காரணம்
Share

தூக்கத்தை தொலைத்த மாணவிகள்!! வெளியான காரணம்

பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவிகளில் அறுபது வீதமானோர் பேன் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தென் மாகாணத்திலுள்ள காலி நகரத்திலும் அதனை அண்டியுள்ள பாடசாலைகளிலும் பயிலும் மாணவிகளே பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தலையில் பேன்கள் அதிகம் காணப்படுவதால் அவர்களின் படிப்பு, தூக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ருஹுணு பல்கலைக்கழக இணை சுகாதார விஞ்ஞான பீட மாணவர்கள் மற்றும் காலி மாவட்ட சுகாதார சேவைகள் அலுவலக அதிகாரிகள் இணைந்து காலி நகரில் உள்ள மாணவிகளிடம் இந்த ஆய்வை மேற்கொண்டதாக சமூக மருத்துவ நிபுணர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார் .

கேள்வித்தாளை முன்வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, 60% மாணவிகள் அதிகப்படியான தலை பேன்களால் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்வது தெரியவந்துள்ளது.

தலையில் உள்ள எண்ணெய் பசையை சுத்தம் செய்யாமை, தலையில் தங்கியிருக்கும் தூசி, தலையை சரியாக கழுவாதது போன்ற விடயங்களே தலையில் பேன்கள் வேகமாக பரவுவதற்கான காரணங்களாக சுட்டிக்காட்ட முடியும் என இந்த ஆய்வில் கலந்து கொண்ட தோல் நோய் வைத்தியர் டொக்டர் அச்சல லியனகே தெரிவித்தார்.

எனினும், தென் மாகாண சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகள் இந்த பிரச்சினையை அவசரமாக ஆராய்ந்து நிலைமையை சரிசெய்ய திட்டமிட்டுள்ளதாக சமூக நிபுணர் டொக்டர் அமில சந்திரசிறி மேலும் தெரிவித்துள்ளார்

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...