இலங்கைசெய்திகள்

நடிகைகளை அவுஸ்திரேலியா அழைத்துச் சென்றதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்

நடிகைகளை அவுஸ்திரேலியா அழைத்துச் சென்றதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்
நடிகைகளை அவுஸ்திரேலியா அழைத்துச் சென்றதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்
Share

நடிகைகளை அவுஸ்திரேலியா அழைத்துச் சென்றதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பிரபல நடிகைகளை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மகேன் ரட்டட்ட தெயக் அமைப்பின் தலைவர் சஞ்சய சஞ்சய் மகாவத்த இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண ரி20 போட்டி தொடரில் இவ்வாறு நடிகைகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் வெளியிடப்பட்டுள்ள கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா ஐந்து நடிகைகளை கிரிக்கெட் நிர்வாகத்தின் செலவில் வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஷம்மி சில்வாவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்ட நடிகைகள் பற்றிய பெயர் விபரங்களும் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

குற்ற விசாரணை திணைக்களத்திடம் மகேன் ரட்டட தெயக் அமைப்பினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக மூன்று நடிகைகளை ஷம்மி சில்வா கிரிக்கெட் சபை பணத்தில் வெளிநாடு அழைத்துச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதாகவும், கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
10 11
இலங்கைசெய்திகள்

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

இலங்கை உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரசார வருமான மற்றும் செலவுகள் தொடர்பான அறிக்கைகள் எதிர்வரும் 28 ஆம்...

8 11
உலகம்செய்திகள்

இரவில் நடந்த திடீர் தாக்குதல்! இந்திய-பாகிஸ்தான் எல்லையில் அடங்காத சத்தம்

இந்தியா-பாகிஸ்தான் மோதல் இன்று உலக அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்திய மற்றும் பாகிஸ்தான்...

7 11
உலகம்செய்திகள்

அதிகரித்து வரும் போர் பதற்றம்! தாக்குதலை தொடங்கிய இந்திய கடற்படை

அண்டை நாடான பாகிஸ்தானின் தாக்குதலுக்குப் பிறகு, அரேபிய கடலில் பல இலக்குகளுக்கு எதிராக இந்திய கடற்படை...

6 12
இலங்கைசெய்திகள்

சமூக வலைத்தளம் மூலம் போலி காதல் – ஆண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

சமூக வலைத்தளம் மூலம் போலி காதல் உறவுகளை ஏற்படுத்தி ஆண்களிடம் கொள்ளையடிக்கப்படும் சம்பவம் தொடர்பில் செய்தி...