நடிகைகளை அவுஸ்திரேலியா அழைத்துச் சென்றதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்
இலங்கைசெய்திகள்

நடிகைகளை அவுஸ்திரேலியா அழைத்துச் சென்றதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்

Share

நடிகைகளை அவுஸ்திரேலியா அழைத்துச் சென்றதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பிரபல நடிகைகளை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மகேன் ரட்டட்ட தெயக் அமைப்பின் தலைவர் சஞ்சய சஞ்சய் மகாவத்த இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண ரி20 போட்டி தொடரில் இவ்வாறு நடிகைகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் வெளியிடப்பட்டுள்ள கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா ஐந்து நடிகைகளை கிரிக்கெட் நிர்வாகத்தின் செலவில் வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஷம்மி சில்வாவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்ட நடிகைகள் பற்றிய பெயர் விபரங்களும் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

குற்ற விசாரணை திணைக்களத்திடம் மகேன் ரட்டட தெயக் அமைப்பினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக மூன்று நடிகைகளை ஷம்மி சில்வா கிரிக்கெட் சபை பணத்தில் வெளிநாடு அழைத்துச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதாகவும், கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...