ஜனாதிபதி தேர்தலை குறிவைக்கும் ரணில்
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலை குறிவைக்கும் ரணில்

Share

ஜனாதிபதி தேர்தலை குறிவைக்கும் ரணில்

அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார் என தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்றையதினம்(25.07.2023) இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கும் மூன்றாவதாக மாகாண சபைத்தேர்தலை நடத்துவதற்கும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் நேற்று மாலை 6 மணிமுதல் 45 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த விசேட சந்திப்பில் பல தரப்பட்ட விடயங்களும் பேசப்பட்ட நிலையில், தனது தேர்தல் திட்டம் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அடுத்த ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தான் ரணில் திட்டமிடுகின்றார் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 3
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தேசிக்காயின் விலை

இலங்கையில் தேசிக்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதன்படி, ஒரு கிலோ கிராம் தேசிக்காய்...

20 5
இலங்கைசெய்திகள்

விடுதலை புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா புகழாரம்

போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போராடி உயிர் நீத்தமைக்காக விடுதலைப்புலிகளின் தலைவர்...

19 6
இந்தியாசெய்திகள்

கரூர் விவகாரத்தில் புதிய திருப்பம்: உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

கரூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

18 7
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்திருந்தால் அவருக்கும் அமைச்சர் பதவி..!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், மகிந்தவின் அரசில் அவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கும்...