ஜனாதிபதி தேர்தலை குறிவைக்கும் ரணில்
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலை குறிவைக்கும் ரணில்

Share

ஜனாதிபதி தேர்தலை குறிவைக்கும் ரணில்

அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார் என தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்றையதினம்(25.07.2023) இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கும் மூன்றாவதாக மாகாண சபைத்தேர்தலை நடத்துவதற்கும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் நேற்று மாலை 6 மணிமுதல் 45 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த விசேட சந்திப்பில் பல தரப்பட்ட விடயங்களும் பேசப்பட்ட நிலையில், தனது தேர்தல் திட்டம் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அடுத்த ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தான் ரணில் திட்டமிடுகின்றார் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 693b75dbdb13b
இலங்கைசெய்திகள்

காதலிக்கு ஸ்மார்ட் ஃபோன், மீதிப் பணத்தைச் சூதாட்டம்: அளுத்கமையில் கொள்ளையிட்ட இளைஞன் கைது!

அளுத்கமைப் பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய ஒருவர்...

the economic times tamil
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: 24 கரட் பவுண் ரூ. 339,000!

நாட்டில் இன்றையதினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 3,000...

images 7 4
உலகம்செய்திகள்

ChatGPT தூண்டுதலால் தாயைக் கொன்ற மகன்: Open AI மீது குடும்பத்தினர் வழக்கு!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த சோல்பெர்க் (Saulberg) என்பவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி தனது...

25 693bfb6f9f0d2
உலகம்செய்திகள்

திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரிக்கின்றன: ஐ.நா.வின் கடுமையான எச்சரிக்கை!

உலகம் முழுவதும் திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) நேற்று...