tamilni 348 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையிலுள்ள சகல வங்கிகளுக்கும் அறிவிப்பு

Share

இலங்கையிலுள்ள சகல வங்கிகளுக்கும் அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியினால் கொள்கை ரீதியாக வட்டி வீதத்தை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இணங்க, வங்கிகளில் கடன்களுக்கான வட்டி வீதத்தை உடனடியாக குறைப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வங்கி சகல வங்கிகளுக்கும் அவசர அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இது தொடர்பில் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கை வங்கி சங்கத்தின் தலைவருக்கு இது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இம்மாதம் ஐந்தாம் திகதி கூடிய மத்திய வங்கியின் நிதிச்சபை, அதன் நிரந்தர வைப்புச் சலுகை வீதத்தை நூற்றுக்கு 11 வீதமாகவும், நிரந்தர வைப்பிற்கான கடன் சலுகை வீதத்தை நூற்றுக்கு 12 வீதத்தாலும் குறைப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளது.

இத்தீர்மானத்திற்கு இணங்க வங்கிகள் மற்றும் நிதி கட்டமைப்பு தமது வாடிக்கையாளர்களுக்கு இதன் பிரதிபலனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய வங்கி மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு இணங்க செயற்படத் தாமதித்தால் இது தொடர்பில் நிர்வாக ரீதியான தீர்மானத்தை மேற்கொள்ள நேரிடும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...