tamilni 348 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையிலுள்ள சகல வங்கிகளுக்கும் அறிவிப்பு

Share

இலங்கையிலுள்ள சகல வங்கிகளுக்கும் அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியினால் கொள்கை ரீதியாக வட்டி வீதத்தை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இணங்க, வங்கிகளில் கடன்களுக்கான வட்டி வீதத்தை உடனடியாக குறைப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வங்கி சகல வங்கிகளுக்கும் அவசர அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இது தொடர்பில் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கை வங்கி சங்கத்தின் தலைவருக்கு இது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இம்மாதம் ஐந்தாம் திகதி கூடிய மத்திய வங்கியின் நிதிச்சபை, அதன் நிரந்தர வைப்புச் சலுகை வீதத்தை நூற்றுக்கு 11 வீதமாகவும், நிரந்தர வைப்பிற்கான கடன் சலுகை வீதத்தை நூற்றுக்கு 12 வீதத்தாலும் குறைப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளது.

இத்தீர்மானத்திற்கு இணங்க வங்கிகள் மற்றும் நிதி கட்டமைப்பு தமது வாடிக்கையாளர்களுக்கு இதன் பிரதிபலனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய வங்கி மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு இணங்க செயற்படத் தாமதித்தால் இது தொடர்பில் நிர்வாக ரீதியான தீர்மானத்தை மேற்கொள்ள நேரிடும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...