அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு
இலங்கைசெய்திகள்

அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

Share

அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம், எதிர்வரும் புதன்கிழமை (26.07.2023) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளதாகவும் மூத்த அரசியல் கட்சியின் தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம், தேசிய நல்லிணக்கத்தை உருவாக்குதல் போன்றவை குறித்து அங்கு விவாதிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அவர் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் 13ஆவது திருத்தம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்தியாவுக்கு விஜயம் செய்வதற்கு முன்னர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களும் முழுமையான அதிகாரப் பிரிவினைக்கு இணங்கினால் மட்டுமே அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64a7f7facdef2 1
இலங்கைசெய்திகள்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்: பரத் தர்ஷன் இயக்கத்தில் ‘ஓ சுகுமாரி’ திரைப்படத்தில் நடிக்கிறார்!

தமிழ் சினிமா ரசிகர்களால் கவனிக்கப்படும் பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், இப்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக...

Eggs 848x565 1
இலங்கைசெய்திகள்

வெள்ளத்தால் முட்டைத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு – பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அதிக அளவில் கோழிகள் இறந்ததன் காரணமாக, எதிர்காலத்தில் முட்டைகளுக்குத் தட்டுப்பாடு...

854660 untitled 2
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிதியுதவி: வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள...

images 8
இலங்கைசெய்திகள்

மின் விநியோகம் வழமைக்குத் திரும்ப நடவடிக்கை: ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

அதிதீவிர வானிலையால் துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்புகளை வெகு விரைவில் மீள இணைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக...