கோதுமை மாவின் விலையை குறைக்க மறுக்கும் நிறுவனங்கள்
இலங்கைசெய்திகள்

கோதுமை மாவின் விலையை குறைக்க மறுக்கும் நிறுவனங்கள்

Share

கோதுமை மாவின் விலையை குறைக்க மறுக்கும் நிறுவனங்கள்

இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு நிறுவனங்களிடம், கோதுமை மாவின் விலையை குறைக்குமாறு கோரிய போதிலும் அதனை குறைக்க மறுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இரண்டு நிறுவனங்களும் சந்தையில் ஏகபோக உரிமையை அனுபவிப்பதால் வலுப் பெற்றுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் மாவுக்கான போட்டி விலையை தீர்மானிக்க சந்தையில் போட்டியை உருவாக்க வேண்டும்.

மாவு இறக்குமதியில் குறைந்தது 30 வீதத்தை ஏனைய இறக்குமதியாளர்களுக்கு வழங்க வேண்டும். அதே வேளையில் 70 வீதத்தை இரண்டு பிரதான நிறுவனங்களுக்கு போட்டி விலையை பேணுவதற்காக வழங்க வேண்டும்.

கோதுமை மா இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதற்கு முன்னர், ஒரு கிலோ மா 165 ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்டது.

இந்தநிலையில் கோதுமை மா இறக்குமதியை மேற்கொள்ளும் இரண்டு நிறுவனங்களும் விலையைக் குறைக்க மறுத்ததையடுத்து, மாவை அத்தியாவசியப் பொருளாகப் பிரகடனப்படுத்தியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...