கோதுமை மாவின் விலையை குறைக்க மறுக்கும் நிறுவனங்கள்
இலங்கைசெய்திகள்

கோதுமை மாவின் விலையை குறைக்க மறுக்கும் நிறுவனங்கள்

Share

கோதுமை மாவின் விலையை குறைக்க மறுக்கும் நிறுவனங்கள்

இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு நிறுவனங்களிடம், கோதுமை மாவின் விலையை குறைக்குமாறு கோரிய போதிலும் அதனை குறைக்க மறுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இரண்டு நிறுவனங்களும் சந்தையில் ஏகபோக உரிமையை அனுபவிப்பதால் வலுப் பெற்றுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் மாவுக்கான போட்டி விலையை தீர்மானிக்க சந்தையில் போட்டியை உருவாக்க வேண்டும்.

மாவு இறக்குமதியில் குறைந்தது 30 வீதத்தை ஏனைய இறக்குமதியாளர்களுக்கு வழங்க வேண்டும். அதே வேளையில் 70 வீதத்தை இரண்டு பிரதான நிறுவனங்களுக்கு போட்டி விலையை பேணுவதற்காக வழங்க வேண்டும்.

கோதுமை மா இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதற்கு முன்னர், ஒரு கிலோ மா 165 ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்டது.

இந்தநிலையில் கோதுமை மா இறக்குமதியை மேற்கொள்ளும் இரண்டு நிறுவனங்களும் விலையைக் குறைக்க மறுத்ததையடுத்து, மாவை அத்தியாவசியப் பொருளாகப் பிரகடனப்படுத்தியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...