கோதுமை மாவின் விலையை குறைக்க மறுக்கும் நிறுவனங்கள்
இலங்கைசெய்திகள்

கோதுமை மாவின் விலையை குறைக்க மறுக்கும் நிறுவனங்கள்

Share

கோதுமை மாவின் விலையை குறைக்க மறுக்கும் நிறுவனங்கள்

இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு நிறுவனங்களிடம், கோதுமை மாவின் விலையை குறைக்குமாறு கோரிய போதிலும் அதனை குறைக்க மறுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இரண்டு நிறுவனங்களும் சந்தையில் ஏகபோக உரிமையை அனுபவிப்பதால் வலுப் பெற்றுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் மாவுக்கான போட்டி விலையை தீர்மானிக்க சந்தையில் போட்டியை உருவாக்க வேண்டும்.

மாவு இறக்குமதியில் குறைந்தது 30 வீதத்தை ஏனைய இறக்குமதியாளர்களுக்கு வழங்க வேண்டும். அதே வேளையில் 70 வீதத்தை இரண்டு பிரதான நிறுவனங்களுக்கு போட்டி விலையை பேணுவதற்காக வழங்க வேண்டும்.

கோதுமை மா இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதற்கு முன்னர், ஒரு கிலோ மா 165 ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்டது.

இந்தநிலையில் கோதுமை மா இறக்குமதியை மேற்கொள்ளும் இரண்டு நிறுவனங்களும் விலையைக் குறைக்க மறுத்ததையடுத்து, மாவை அத்தியாவசியப் பொருளாகப் பிரகடனப்படுத்தியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...