இலங்கை
வடமாகாண தனியார் வைத்தியசாலை கழிவுகளை கொழும்புக்கு
வடமாகாண தனியார் வைத்தியசாலை கழிவுகளை கொழும்புக்கு
வடமாகாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை கழிவுகளை கொழும்புக்கு அனுப்பி எரியூட்டப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்ட கோம்பயன் மணல் மயானத்தில் எரியூட்டியை நிறுவுவதற்கு, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கழிவுகளை மயானத்தில் எப்பகுதியில் அமைப்பது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும், விரைவில் இடத்தினை அடையாளப்படுத்தி, பணிகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் உள்ள எரியூட்டி திருத்தப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அரச வைத்தியசாலை மருத்துவ கழிவுகள் எரியூட்டப்படும் என்றும் சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login