இலாபத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
இலங்கைசெய்திகள்

இலாபத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

Share

இலாபத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

மிக நீண்டகாலமாக நட்டத்தில் இயங்கி வந்த இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குள் பாரிய இலாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிதி அமைச்சினால் இவ்வருட நடுப்பகுதியில் வெளியிடப்பட்ட நிதி நிலை அறிக்கையில் மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எண்ணெய் இறக்குமதி சந்தைப்படுத்தலின் மூலமாக மாத்திரம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 43.4 பில்லியன் இலாபத்தை ஈட்டியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக 277.1 மில்லியன் டொலர்களும், கனிம எண்ணெய் இறக்குமதிக்காக 1,009.3 மில்லியன் டொலர்களும் செலவிடப்பட்டதாகவும், குறித்த காலகட்டத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட பெற்றோலியப் பொருட்களின் மொத்த மதிப்பு 877.35 மில்லியன் டொலர்கள் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில், எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கைக்கு 1,599.7 மில்லியன் டொலர்கள் செலவாகியுள்ளது என்றும், இது மொத்த இறக்குமதி செலவில் 30 சதவீதமாகும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...