நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் ஏற்படவுள்ள தாக்கம்!
இலங்கைசெய்திகள்

நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் ஏற்படவுள்ள தாக்கம்!

Share

நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் ஏற்படவுள்ள தாக்கம்!

நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ள பெரும்போக பயிர்ச்செய்கை வறட்சியினால் பாதிக்கப்படும் என வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், 2023 ஆம் ஆண்டில் இலங்கை விவசாயிகள் கடினமான ஆண்டை எதிர்கொள்வார்கள் எனவும் ஆங்கில இதழில் தெரிவிக்கப்படுகின்றது.

2024 ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாக உலக விஞ்ஞானிகள் கணித்துள்ள நிலையில், எல் நினோ விளைவு காரணமாக இலங்கையின் பெரும்போக பயிர்ச்செய்கைப் பருவம் வரட்சியின் காரணமாக மோசமாகப் பாதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை பலவீனமடையும் நிலை எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பேராதனை பல்கலைக்கழக மூத்த விஞ்ஞானி பேராசிரியர் புத்தி மரம்பே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டில் வறட்சி நிலையை ஏற்படுத்தக்கூடிய மழைப்பொழிவு குறைவதை இது குறிக்கும், அத்துடன் இது முக்கிய பெரும்போக பருவத்தில் சாகுபடிக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

3 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் எல் நினோ விளைவை 1998 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இலங்கை ஏற்கனவே அனுபவித்துள்ளது.

இந்த நிலையில் விவசாய திணைக்களமும் விவசாய அமைச்சும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஒரு திட்டத்தை வகுத்து அடுத்த பெரும் பக்கத்தில் இந்த வறட்சி நிலையை எதிர்கொள்ள தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...