இன்றுடன் கால அவகாசம் நிறைவு!
இலங்கைசெய்திகள்

இன்றுடன் கால அவகாசம் நிறைவு!

Share

இன்றுடன் கால அவகாசம் நிறைவு!

அஸ்வெசும சமூக நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு அவசர அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இதற்கான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (10.07.2023) நிறைவடையவுள்ளது.

முன்னதாக மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த மாத இறுதியுடன் முடிவடையவிருந்தது.

எனினும், பல தரப்பினரின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு கால அவகாசத்தை இன்று வரை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

அஸ்வெசும சமூக நலன் திட்டத்திற்காக சுமார் 9 இலட்சம் மேன்முறையீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இதுவரை சுமார் 12,000 ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

எனினும் இன்றும் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை முன்வைக்க முடியும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்பிறகு, மாவட்டச் செயலாளர்கள் மூலம் பெறப்படும் முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு இறுதி ஆவணம் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 4
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இரகசியப் பேச்சுவார்த்தை? இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு சந்தேகம்!

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவும் ஈரானும் தமக்குத் தெரியாமல் இரகசியப்...

02 4
செய்திகள்இலங்கை

ஈரான் உச்சத் தலைவர் கமேனியின் மறைவு: கொழும்பு தூதரகத்தில் ரணில் விக்ரமசிங்க அஞ்சலி!

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) திடீர் மறைவுக்கு ஆழ்ந்த...

03 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் – வவுனியா மின்சார விநியோகத்தில் கோளாறு: நாட்டின் பல இடங்களில் மின்தடை!

புதிய அனுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளுக்கு இடையிலான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர்...

22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...