சஜித் தொடர்பில் சபாநாயகர் உத்தரவு
இலங்கைசெய்திகள்

சஜித் தொடர்பில் சபாநாயகர் உத்தரவு

Share

சஜித் தொடர்பில் சபாநாயகர் உத்தரவு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்ற குழு கூட்டங்களில் பங்கேற்கவோ கேள்விகளை எழுப்புவோ முடியாது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு குறித்து, நாடாளுமன்றின் பொது நிதி குழுவில் நடைபெற்ற கூட்டத்தில் சஜித் பிரேமதாச பங்கேற்று இருந்தார்.

இவ்வாறு நாடாளுமன்ற குழு கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்க முடியாது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு கடன் சீரமைப்பு குறித்து அரச அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பும் நோக்கில் தாம் இந்த கூட்டத்தில் பங்கேற்றதாகவும் குறிப்பாக ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பனவற்றுக்கு கடன் மறுசீரமைப்பில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து அறிந்து கொள்ளவே தாம் கூட்டத்தில் பங்கேற்றதாகவும் சஜித் பிரேமதாச பதிலளித்துள்ளார்.

அரசாங்க அதிகாரிகள் தமது கேள்விக்கு பதில் அளிக்க தவறினால் அது தனது சிறப்புரிமையை மீறும் வகையிலானது எனவும் அவ்வாறு சிறப்புரிமை மீறப்பட்டால் அதற்கு சபாநாயகர் பொறுப்பு எனவும் சஜித் சுட்டி காட்டியுள்ளார்.

இவ்வாறு அனுமதி வழங்கப்படாவிட்டால் தாம் தனியான குழு அமைத்து அரச அதிகாரிகளை அழைத்து கேள்வி எழுப்பப் போவதாக சஜித் கடும் தொனியில் சபாநாயகரிடம் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களை மீறிச் செயற்பட வேண்டாம் என அவர் சபாநாயகரிடம் கோரியுளள்ளார்.

இதனைத் தொடர்ந்து அரச அதிகாரிகளை அழைத்து கேள்வி எழுப்ப அனுமதி வழங்குவதாக சபாநாயகர் மகிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...