விரைவில் பேச்சு என்கிறார் ரணில்!
இலங்கைசெய்திகள்

விரைவில் பேச்சு என்கிறார் ரணில்!

Share

விரைவில் பேச்சு என்கிறார் ரணில்!

அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முன்னெடுத்துள்ள பேச்சின் அடுத்த சுற்றுப் பேச்சு விரைவில் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அரசியல் தீர்வு தொடர்பில் வெளிநாடுகளில் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் அடுத்த கட்டப் பேச்சு எப்போது நடைபெறும் என ஜனாதிபதியிடம் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்

“பேச்சு விரைவில் நடக்கும். அது தொடர்பில் சந்தேகப்படத் தேவையில்லை. அரசியல் தீர்வில் உறுதியாக இருக்கின்றேன்.

வெளிநாடு சென்றமையால் திட்டமிட்டவாறு பேச்சு நடக்கவில்லை. சர்வதேச சமூகத்திடம் அரசியல் தீர்வு தொடர்பில் கருத்துரைத்துள்ளேன்.

எனவே, அதைச் செயற்படுத்துவேன்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை – அரசுடனான பேச்சு தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனைக் கேட்டபோது,

“ஜனாதிபதி ரணில் கூறிய திகதியில் பேச்சு நடக்கவில்லை. அடுத்த கட்டப் பேச்சு சம்பந்தமாக அறிவிக்கப்படவில்லை.

தொடர்ந்து இவ்வாறு விட்டுக்கொண்டிருக்க முடியாது. நாங்கள் தீர்க்கமான முடிவு எடுப்போம் என்று ஜனாதிபதியிடம் நேரடியாக கடைசி சந்திப்பில் தெரிவித்துவிட்டேன்.

விரைவில் ஒரு முடிவு எடுப்போம். ஒரு வாரத்தின் பின்னர் என்னைத் தொடர்புகொள்ளுங்கள்” என பதிலளித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...